அகநானூற்றில் தீபாவளி
தமிழாகரர் தெ. முருகசாமி
தீப+ஆவளி = தீபாவளி. தீபம்-விளக்கு; ஆவளி-வரிசை:
தீபங்களை வரிசையாக வைத்து வழிபடும் விழாதான் தீபாவளி. ஐப்பசி அமாவாசையையொட்டிக் கொண்டாடப்படும் இவ்விழா, வடவரின் நாகரிகக் கலப்பால் தமிழர்கள் மேற்கொண்டுவிட்ட விழாவாகும். இதன் அமைப்பைக் கார்த்திகை மாத முழுநிலாவில் கொண் டாடும் கார்த்திகை விளக்கு விழாவாக அகநானூற்றில் நக்கீரர் 141-ம் பாடலில் கூறுகிறார். இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. நாகரிகக் கலப்பான ஒரு காரணமன்றி வேறு சரியான காரணம் தமிழர் மேற்கொண்டுவிட்ட ஐப்பசி தீபாவளிக்குக் கூறமுடியவில்லை.

இலங்கை தமிழ் இல்லத்தில் கார்த்திகை விளக்கு: [மேலும் படங்கள்]