Main

September 15, 2008

பல்துறை அறிஞன் அறிஞர் அண்ணா

எம்.கே.ஈழவேந்தன்

செப்டெம்பர் - 15 அறிஞர் அண்ணாவின் 99 வது பிறந்த தினம்

"நெற்றியில் அறிவை தேக்கி, நெஞ்சத்தில் வீரம் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தை தேக்கி, சுற்றாமல் சுற்றும் கண்ணில் துடிப்பினைத் தேக்கி, மண்ணில் கற்றவர் திகைக்கும் வண்ணம் காண்பவர் ஒருவர் அண்ணா 'என்று கவிஞர் வேழவேந்தன் வாழ்த்துவதற்கு அமைய, நெற்றியில் அறிவைத் தேக்கி, நெஞ்சத்தில் வீரத்தைத் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு மழைபோல், சொற்பொழிவுகளை பொழிந்தவர் அண்ணா. சுற்றாமல் சுற்றாமல் சுற்றும் தன் கண்ணில் துடிப்பினைத் தேக்கி வைத்த அண்ணா தூங்கிக் கிடந்த தமிழ் இனத்தை துடித்தெழச் செய்தார்.

Continue reading "பல்துறை அறிஞன் அறிஞர் அண்ணா" »

September 14, 2008

பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்

ல விருதுகளை குவித்த குன்னக்குடி வைத்தியநாதன், திரைப்பட இசையமைப்பாளர், தியாகபிரம்ம ஆராதனை குழுவின் செயலாளர், ராகா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆகிய பொறுப்புக்களை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளார்.

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் மறைவு இசை உலகம் மற்றும் திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்.

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசைச் சேவையை பாராட்டி, இந்திய மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

[குன்னக்குடி வைத்தியநாதன், மார்ச் 2, 1935 - செப்டெம்பர் 8, 2008]

Continue reading "பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்" »

September 01, 2008

தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை

~ செப்டெம்பர் 1 ~ இன்று வண. பிதா. தனிநாயகம் அடிகள் நினைவு தினம் ~

மிழாய்வுத் தேன் வடம்பிடித்து
தரணியெங்கும் வலம்வந்த தன்னிகரில்லா அருட்தந்தையே!
தமிழ்த் தூதின் தனிநாயகமே!

வண. பிதா. சேவியர் தனிநாயகம் அடிகள்

[ஆகஸ்ட் 2, 1913 - செப்டெம்பர் 1, 1980]

Continue reading "தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை" »