பல்துறை அறிஞன் அறிஞர் அண்ணா
எம்.கே.ஈழவேந்தன்
செப்டெம்பர் - 15 அறிஞர் அண்ணாவின் 99 வது பிறந்த தினம்
"நெற்றியில் அறிவை தேக்கி, நெஞ்சத்தில் வீரம் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தை தேக்கி, சுற்றாமல் சுற்றும் கண்ணில் துடிப்பினைத் தேக்கி, மண்ணில் கற்றவர் திகைக்கும் வண்ணம் காண்பவர் ஒருவர் அண்ணா 'என்று கவிஞர் வேழவேந்தன் வாழ்த்துவதற்கு அமைய, நெற்றியில் அறிவைத் தேக்கி, நெஞ்சத்தில் வீரத்தைத் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு மழைபோல், சொற்பொழிவுகளை பொழிந்தவர் அண்ணா. சுற்றாமல் சுற்றாமல் சுற்றும் தன் கண்ணில் துடிப்பினைத் தேக்கி வைத்த அண்ணா தூங்கிக் கிடந்த தமிழ் இனத்தை துடித்தெழச் செய்தார்.

