Main

November 15, 2008

'தென்னிலங்கை மனித நேயத்தை புரிந்து கொள்ளாமல் சலசலக்கிறது'

டக்கே வன்னிப் பகுதியில் பொது மக்கள் சொல்லொணாத் துன்பங்களை யுத்தம் காரணமாக அனுபவித்து வருகையில், ஸ்ரீ லங்காவின் தெற்கே அது குறித்த புரிந்துணர்வின்றி அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் யுத்த நிறுத்தத்திற்கு எதிர் மறையான கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்து, இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி, நவம்பர் 16 ம் திகதிய ஆசிரியத்தலையங்கத்தில் விசனம் தெரிவித்துள்ளது.

[பரந்தன் பகுதியில், நவம்பர் 6ம் திகதி ஸ்ரீ லங்கா விமானப் படையின் தாக்குதலில் வேளாண்மை கால்நடைகளும் பலியாகின]

"வன்னி மக்களின் துயர்துடைக்க, பசிப்பிணி போக்க தமிழகமே திரண்டு உணவுப் பொதிகளை கப்பலேற்றி அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இந்த உணர்வை, எழுச்சியை அருகருகே வாழ்ந்த எம்மவரிடமிருந்து காணமுடியவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்," என வீரகேசரி சுட்டிக்காட்டியுள்ளது.

வீரகேசரி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:

Continue reading "'தென்னிலங்கை மனித நேயத்தை புரிந்து கொள்ளாமல் சலசலக்கிறது'" »

November 05, 2008

வெள்ளை மாளிகையின் கறுப்பு நிலா !

பராக் ஒபாமாவின் வெற்றி, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, மானுடம் இன வேறுபாடுகளையும், நிற வேறுபாடுகளையும் கடந்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு சரித்திரச் சான்று பகர்ந்திருக்கிறது என்பது 21-ம் நூற்றாண்டுக்கே கிடைத்திருக்கும் வெற்றி, என தமிழக நாளேடு தினமணி நவம்பர் 6ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

பெருவாரியாக உள்ள அமெரிக்க வெள்ளையர்கள் வாக்களித்து ஒபாமாவைத் தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது, மக்களாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, எனவும் தினமணி சுட்டிக்காட்டியுள்ளது.

[பராக் ஒபாமா: அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி]

தினமணி ஆசிரியத்தலையங்கம் முழுமையாக:

Continue reading "வெள்ளை மாளிகையின் கறுப்பு நிலா !" »

November 02, 2008

அமைதிச் சூழலை உருவாக்க இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆக்கபூர்வமான வழியில் முன்வர வேண்டும்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், இரு தரப்பினர் மத்தியிலும் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கக் கூடிய அமைதிச் சூழலை உருவாக்கவும் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆக்கபூர்வமான வழியில் முன்வர வேண்டும், இவ்வாறு இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி, நவம்பர் 3ம் திகதிய ஆசிரியத்தலையங்கத்தில் வேண்டுகோள் விடுத்திள்ளது.

நாட்டின் சகல மக்களுக்கும் நன்மை தரக்கூடிய விடயம் இதுவொன்றே என வீரகேசரி சுட்டிக்காட்டியுள்ளது. சமாதானம் குறித்தும் யுத்த நிறுத்தம் குறித்தும் ஒரே பல்லவியைப் பாடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

வீரகேசரி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:

Continue reading "அமைதிச் சூழலை உருவாக்க இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆக்கபூர்வமான வழியில் முன்வர வேண்டும்" »

October 28, 2008

இலங்கை பற்றிய இந்திய குழுவில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்ளடக்கப்பட வேண்டும்

லங்கை அரசின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் நம்புவதற்கு, இந்திய - தமிழக அரசுகள் ஏன் இன்னும் தயாராக இருக்கின்றன என்று கேள்வி எழுப்பி தமிழக நாளேடு தினமணி அக்ரோபர் 29ம் திகதிய இதழில் ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது.

ஏமாறாதே! ஏமாற்றாதே!!, என்று தலைப்பிட்டு, "இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்த தமிழக அரசியல்வாதி ஒருவரை உள்ளடக்கிய இந்தியக் குழுவால் மட்டும்தான் இலங்கையின் சமாதானத்துக்கு வழிகோல முடியுமே தவிர, அதிகாரிகளால் முடியாது", எனவும் தினமணி வலியுறுத்தியுள்ளது.

தினமணி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:

Continue reading "இலங்கை பற்றிய இந்திய குழுவில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்ளடக்கப்பட வேண்டும்" »

October 08, 2008

இந்த அரசு தேவைதானா ?

08 ஒக்ரோபர் 2008 - புதன்கிழமை, தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேட்டின் ஆசிரியர் தலையங்கம்:

"பாவப்பட்ட ஜென்மங்கள்" என்கிற வார்த்தைப் பிரயோகத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள் யார் என்று கேட்டால், இலங்கையில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். காஸ்மீரப் பண்டிட்டுகளாவது அகதிகளாக அவர்களது உறைவிடத்திலிருந்து விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அதற்கும் வழியில்லாமல், அங்கேயே இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதுதான் தலையெழுத்து போலிருக்கிறது.

Continue reading "இந்த அரசு தேவைதானா ?" »