'தென்னிலங்கை மனித நேயத்தை புரிந்து கொள்ளாமல் சலசலக்கிறது'
வடக்கே வன்னிப் பகுதியில் பொது மக்கள் சொல்லொணாத் துன்பங்களை யுத்தம் காரணமாக அனுபவித்து வருகையில், ஸ்ரீ லங்காவின் தெற்கே அது குறித்த புரிந்துணர்வின்றி அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் யுத்த நிறுத்தத்திற்கு எதிர் மறையான கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்து, இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி, நவம்பர் 16 ம் திகதிய ஆசிரியத்தலையங்கத்தில் விசனம் தெரிவித்துள்ளது.

[பரந்தன் பகுதியில், நவம்பர் 6ம் திகதி ஸ்ரீ லங்கா விமானப் படையின் தாக்குதலில் வேளாண்மை கால்நடைகளும் பலியாகின]
"வன்னி மக்களின் துயர்துடைக்க, பசிப்பிணி போக்க தமிழகமே திரண்டு உணவுப் பொதிகளை கப்பலேற்றி அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இந்த உணர்வை, எழுச்சியை அருகருகே வாழ்ந்த எம்மவரிடமிருந்து காணமுடியவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்," என வீரகேசரி சுட்டிக்காட்டியுள்ளது.
வீரகேசரி ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:
Continue reading "'தென்னிலங்கை மனித நேயத்தை புரிந்து கொள்ளாமல் சலசலக்கிறது'" »
