« October 2010 | Main | December 2010 »

November 25, 2010

காணொலி: 'வேலவா..வடி வேலவா' - கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர்

வேலவா..வடி வேலவா...வேடனாக வந்து நின்ற வேலவா - வழங்குபவர்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள்


கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர் நிகழ்வில் இருந்து படக் கோவை ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

November 21, 2010

காணொலி: திருகோணமலை நிலாவெளியில் மீனவர் மரபு இசைப்பாடல்

ஸ்ரீ லங்கா மேல் மாகாணத்தில் இருந்து , கிழக்கு மாகாணம் வந்துள்ள மீனவர்கள் கடற்கரையில் இசைக்கும் மரபு இசை

திருகோணமலை மாவட்டம், நிலாவெளியில் மீன் பிடி நிமித்தம் மேல்மாகாணத்தில் உள்ள உடப்பு கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள மீனவர்கள் மரபுப் பாடல் இசைப்பு ~ படங்கள், ஒலிப்பதிவு: துஷியந்தினி கனகசபாபதிப்பிளை

November 20, 2010

அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார்: "எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!"

காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல், வழங்குபவர் சீர்காழி எஸ். கோவிந்தாரஜன் ~ விநாயகர் நான்மணி மாலையிலிருந்து:

கும்பிளாவளை பிள்ளையார் கோயில், அளவெட்டியிலிருந்து ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

க்தி உடையார் காரியத்திற்
பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்

சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?
வித்தைக் கிறைவா! கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந் திடநீ செயல் வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது;
இவையும் தர நீ கடவாய்!

November 17, 2010

காணொலி: எல்லோரும் ஹஜ் செய்யலாம்...

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

ஹாஜி ஈ. எம். நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்

சென்று வரலாம் மதினா!!!

November 13, 2010

கிளிநொச்சி தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்

கிளிநொச்சியில் சர்வதேச மருத்துவ உதவி (International Medical Health Organization - ஐ.எம்.எச்.ஓ) நிறுவகம் செயற்படுத்தி வரும் வாழ்வாதாரத் திட்டங்களின் காணொலித் தொகுப்பிலிருந்து:

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

November 09, 2010

mp3 ~ சந்ததம்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் வழங்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ்

நவம்பர் 6 - 12, 2010 : கந்த சஷ்டி ~ சிறப்புப் பதிப்பு

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. 90 - கந்தர் அலங்காரம்

DCMO119.JPG

ஐக்கிய அமெரிக்கா, வாஷிங்டன். டி.சி. தலை நகர் முருகன் முகப்பு

பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் வழங்கும் அருணகிரிநாதர் திருப்புகழ்

ந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

பொருள்: சந்ததம் பந்தத் தொடராலே

ன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!

கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ (நன்றி: http://thirupugazh.blogspot.com)

WDCM119A.JPG

ஐக்கிய அமெரிக்கா, வாஷிங்டன். டி.சி. தலை நகர் முருகன் வாசற் கோலம்