« August 2010 | Main | October 2010 »

September 26, 2010

முஸ்லீம் காங்கிரஸ் ஏன் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிக்கும்?

டி.பி.எஸ். ஜெயராஜ்

ணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிரணியுடன் இருந்துக் கொண்டே அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் தீர்மானித்தபின் அது மீண்டும் சிறு புயலின் மையமாகியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கடந்த ஓகஸ்ட் 27 இல் அந்த கட்சியின் தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸலாமில் கூடியது. பல விவாதங்கள், கலந்துரையாடலின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட அங்கத்தவர்கள் 24 பேர் ஏகமனதானது எனக் கூறப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு வந்தனர்.

இந்தக் கூட்டத்தின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான 50 வயதான ரவூப் ஹக்கீம், ஊடகங்களை சந்தித்துப் பேசியபோது தமது கட்சி உத்தேசித்துள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்கும், ஆனால் எதிரணியோடு தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான இதன் இந்த தீர்மானம் எதிரணியிரிடையே எதிர்பார்த்தவாறே கசப்புணர்வைத் தோற்றுவித்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியின் (யூ.என்.எவ்.) இன் இணை நிறுவுனர் என்பதுடன் அந்த எதிரணியின் உற்சாகமான, முக்கியமான பங்காளராகவும் இருந்தது.

இந்த வருடம் ஏப்ரல் 08 ஆம் திகதிதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கண்டி, வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆறு இடங்களை வென்றது. எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு இடங்களை கொடுத்ததுடன் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்தத் தீர்மானம்பற்றி ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்களில் பெருங் கசப்புணர்வு காணப்பட்டது. இது ஒரு அரசியல் துரோகமாக, முக்கியமாக பிரதான பங்காளிக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியினால் (யூ.என்.பி.) காணப்பட்டது.

முன்னரும் வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடங்கள் ஒதுக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களில் மனக்கசப்பு காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட முஸ்லிம் அங்கத்தவரான கண்டியை சேர்ந்த அப்துல் காதர், ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்த விடயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கவனம் செலுத்த மறுத்தமை அப்துல்காதரை தேர்தலின் பின் தனிவழி போக வைத்தது. இவர் விரைவில் அரசதரப்புக்கு முறையாக மாறவுள்ளதாக நம்பப்படுகிறது.

தேர்தல் முடிவடைந்தபின் தேசிய பட்டியலில் இடங்களை ஒதுக்குவதுபற்றி ஐக்கிய தேசிய முன்னணியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிறையவே காணப்பட்டன. தேசியப்பட்டியல் இடத்துக்கான பல கோரிக்கைகள் குவிந்தமையால் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார பீடம் திணறியது. ஆனால், எல்லோரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியமாயிற்று. இதனால் பல கசப்புகள் தோன்றின. அழுத்தங்கள் இருந்தபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி அந்த கட்சிக்கு இரண்டு இடங்களைக் கொடுத்தார்.

தீர்மானம்

இப்போது இதே முஸ்லிம் காங்கிரஸ் தனிவழிபோய், பாரிய அரசியல் விளைவுகளைக் கொண்டுவரக் கூடிய பெரும் கருத்து முரண்பாடுகளுக்கு இட்டுச் சென்றுள்ள அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை தனித்து எடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரான கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான ஒருதலைபட்சமான தீர்மானத்தை எடுப்பதற்கு முன் ஐக்கிய தேசிய முன்னணியை கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற அரசாங்கத்துக்கு உதவும். இது போன்ற வேறு விடயங்களிலும் எதிர்வரும் காலங்களிலும் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் சாத்தியம் உண்டு. ஆயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆதரவுக்கு பிரதியுபகாரமாக மந்திரிசபை அல்லது அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள மாட்டாது.

சுருங்கக் கூறின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டே தொடர்ந்தும் எதிரணியில் இருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது விட்டாலும் இப்போதைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலையில்தான் உள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடித்தது போன்ற நிலைமையே காணப்படுகிறது. ஒரே அடியில் அரசாங்கத்தில் கட்சியை உள்வாங்காமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியாக எதையும் பதிலுக்கு பெற்றுக்கொள்ளாமல் ஒரு அடிப்படையான ஒரு பிரச்சினையில் அரசாங்கத்துக்கு விட்டுக்கொடுத்தது போலத் தோன்றலாம். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது ஒரு பக்கச் சார்பானதாக தோன்றும் இந்த நிலைமைக்கு இட்டுச் சென்ற காரணம் யாதாக இருக்கலாம்?

இதில் வெளியில் தெரிவதைவிட, கூடுதலான விடயங்கள் உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த தீர்மானம் பற்றிய கண்டனத்தை தாங்க வேண்டிய நிலையில் ரவூப் ஹக்கீம் காணப்படினும் இவர் கொந்தளிக்கும் அரசியல் கடலில் கட்சிப் படகை கரைசேர்க்க முயன்று கொண்டிருந்தார் என்பதும் மிகவும் சிக்கலான சங்கடமான நிலைமையில் காணப்பட்டார் என்பதுமே யதார்த்தம்.

முஸ்லிம் காங்கிரஸ் அதன் புகழ் மிக்க இணை நிறுவுனர் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் அவரிடத்துக்கு வந்த ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தலைமையின் கீழ் கடந்த காலங்களில் நடந்த நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களின்போது வெற்றியாளரை ஆதரிக்கும் கெட்டித் தனத்தை கொண்டிருந்தது.

எம்.எச்.எம்.அஷ்ரப்

1988 இல் சிறிமா பண்டாரநாயக்காவுக்கான ஆதரவை விலக்கி, ரணசிங்க பிரேமதாஸவுடன் எம்.எச்.எம். அஷ்ரப் சார்ந்ததிலிருந்து 2001 இல் சந்திரிகா அரசிலிருந்து விலகி, ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் ரவூப் ஹக்கீம் கெட்டித்தனமாக மாறியதுவரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெல்லும் பக்கத்திலேயே இருந்து வந்தது.

இந்த யோகம் ரவூப் ஹக்கீம் விக்ரமசிங்கவுடன் அணி சேர்ந்தபின் அண்மைக்காலமாக குறையத் தொடங்கிற்று. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2004 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து எதிரணிக்குத் தள்ளப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் 2005, 2010 ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முறையே ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகா ஆகியோரை ஆதரித்தது. 2010 நாடாளுமன்ற தேர்தலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எதிரணிக்கே தள்ளியது.

ஆனால், இந்தத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராட்டும் வகையில் சாதித்தது முரண்நகையானது. இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் இந்தக் கட்சி விக்கிரமசிங்கவுக்கும் பொன்சேகாவுக்கும் முஸ்லிம் வாக்குகளில் பெரும் பங்கை பெற்றுக்கொடுத்தது. அதேபோன்று இந்தக் கட்சி 2004 ,2010 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களில் மிகப் பிரபலமான தனிக்கட்சி என்பதை நிருபித்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரது கட்சிக்கும் சிங்கள வாக்காளர்கள் பெருந்தொகையில் ஆதரவு வழங்கிய அதே நேரத்தில் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் எதிர்க்கட்சியினருக்கு மிகுந்த ஆதரவை வழங்கியமை ஆபத்தான முனைவாக்கம் பெற்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இது இனம் சார்ந்த சகல அரசியல் கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும் என்னும் கொள்கையை முன்வைக்கும் சிந்தனைப் பள்ளியின் தோற்றத்துக்கும் காரணமாயிற்று.

தற்போதைய அரசியல் இயங்கியலின் ஓட்டத்தின் விரும்பத் தகாத விளைவே இது எனக் கொண்டாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் சோரம்போகும் தொடர்ச்சியான தோற்றப்பாடும் காணப்படுகிறது.

பிளவு

அண்மைக்காலத்தில் முஸ்லிம் அரசியலில் ஒரு புறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான உறுதியும் மறுபுறத்தில் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களின் சலனப்படும் இயல்பும் கவனிக்க வேண்டிய விடயமாக உள்ளது. மக்கள் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர். ஆனால், தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலர் தலைமைக்கு விசுவாசமாக இல்லை. இதனால் கட்சிக்கும் விசுவாசமாக இல்லை. பிளவுகளும் உடைதல்களும் கட்சியின் சிதைவுக்கு காரணமாயுள்ளன.

எம்.எச்.எம். அஷ்ரப்பின் காலத்திலேயே இந்தவகைப் போக்கு காணப்பட்டது. 2000 இல் நாடாளுமன்றம் அதன் காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேரில் ஐவர் அஷ்ரபுடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஹக்கீம் மட்டுமே தலைவருடன் முரண்படாதவராகக் காணப்பட்டார்.

செப்டெம்பர் 16 2000 இல் அஷ்ரபின் மறைவுக்கு பின் ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது 2000 ஆம் ஆண்டு 10 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்யப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் என 11 எம்.பிக்களைப் பெற்றுக்கொண்டது. அஷ்ரப்பின் மனைவி பேரியலுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் பிளவு உண்டானது.

ஹக்கீமுடன் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் சேர்ந்தனர். நான்கு பேர் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தனர். பேரியலின் அணி தேசிய ஐக்கிய முன்னணியை (நுஆ) பொறுப்பேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக இயங்கியது. 2001 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் பன்னிரண்டு இடங்களைப் பிடித்தது. மீண்டும் ஒரு பிளவு கட்சியில் தோன்றியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தையின் பொருட்டு ரவூப் ஹக்கீம் வெளிநாடு சென்றிருந்த சமயம் கட்சியின் தலைவர் டாக்டர் ஹஸரத் ஒரு புரட்சியை கிளப்பினார். இந்த பிரச்சினையை கையாளவென ஹக்கீம் விரைந்து நாடு திரும்பினார்.

தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பன்னிருவரில் அரைப்பங்கினரே எஞ்சியிருந்தனர். அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், ஹரிஸ் , அஸீஸ் உட்பட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறியிருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக முஸ்லிம் தேசிய காங்கிரஸ் என்னும் புதிய கட்சியை அதாவுல்லா தோற்றுவித்தார்.

உடைந்துடைந்து போதல்

பேரியல் அஷ்ரப், அதாவுல்லா போன்ற காரணிகள் இருந்த போதிலும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் முஸ்லிம் கட்சிகளிடையில் அதிசிறந்த அடைவைப் பெற்றது. இந்த கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பரிதாபம்! உடைந்துப்போதல் மீண்டும் தொடங்கிற்று. ரிஸாட் பதியுதின் தலைமையிலான நால்வர் குழு ஒன்று சந்திரிகா அரசாங்கத்துடன் சேர்ந்தது. இந்தக் குழுவில் நஜிப் ஏ. மஜித், அமீர் அலி ஆகியோர் இருந்தனர். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி இந்தக் குழுவால் தோற்றுவிக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தபின் எஞ்சியிருந்த ஆறு பேருக்கிடையில் இரண்டாவது பிளவு ஏற்பட்டது. இந்த ஆறுபேரில் மூவர்- பைஸல் காஸிம், நஜீமுதின், கே.ஏ.பாயிஸ் ஆகியோர் பிரிந்து சென்று அரசுடன் சேர விரும்பினர். மீண்டும் கட்சி உடைவதை தடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுத்து ஒரு கட்சியாக அரசாங்கத்துடன் சேர்ந்தது.

ஆனாலும் ராஜபக்ஷ ஆட்சியில் இந்தக் கட்சி ஒடுக்கப்படுவதாக அறிந்துகொண்டது. கட்சியின் அடிமட்டத்தில் கட்சி மீண்டும் எதிர்த்தரப்புக்கு திரும்ப வேண்டும் என்னும் உறுதிப்பட்ட கருத்து காணப்பட்டது. கட்சி வெளியேறியபோது நிஜாமுதின் ,கே.ஏ.பாயிஸ் ஆகியோர் திரும்பிவர மறந்துவிட்டனர். எனவே மீண்டும் ஒரு பிரிவினை ஏற்பட்டு ஹக்கீம், ஹஸன் அலி, சேகுதாவூத் பைஸல் காசிம் ஆகியோர் மட்டும் திரும்பி வந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தெரியப்பட்டு பின்பு அரசாங்க பக்கத்துக்கு தாவும் சுயலாப நோக்கு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழக்கமே அண்மைக்காலமாக ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை கெடுக்கும் சாபக்கேடாக உள்ளது. எந்த நேரமும் அறுந்து தலைமேல் விழக்கூடும் நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாள் போன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கட்சிப்பிளவுதான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தலைமையின் அதிகாரத்தை உறுதியாக பிரயோகிக்க முடியாது முடக்கியுள்ளது.
இந்த தீர்க்கமான காரணியே இப்போது காணப்படும் நெருக்கடியின் மூலவேராக உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், எந்த நேரமும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிப்பதவிக்காக கட்சிதாவும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார். கட்சி உடைந்துபோதலை தவிர்க்கவும் கட்சி ஒற்றுமையாக இருப்பதுபோன்ற தோற்றத்தை காட்டவும் வேறேதும் செய்ய முடியாத நிலையில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், எதிர்த்தரப்பிலிருந்து கொண்டு அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்தை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

தற்போதைய நெருக்கடியான தோற்றம் தேர்தல் பிரசார காலத்திலேயே இருந்ததாக அறியப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக நியமிக்கப்பட்ட சிலர் தேர்தலில் வென்றப்பின் அரச தரப்புக்குத் தாவுவார்கள் என்று முஸ்லிம் வட்டாரத்தில் கதை அடிப்பட்டது.

தோற்றப்பாடு

பிரிந்துபோகும் தோற்றப்பட்டை தடுக்குமுகமாக, ரவூப் ஹக்கீம் வேட்பாளர்களிடமிருந்து அவர்கள் கட்சியைவிட்டு போகமாட்டார்கள் என்னும் உறுதிமொழியை எழுத்து மூலம் பெற்றிருந்தார். சில இஸ்லாமிய சமயத் தலைவர்களும் இதை அழுத்திக் கூறினர். சில வேட்பாளர்கள் இந்த வாக்குறுதியை பள்ளிவாசல்களில் வைத்தும் அளித்திருந்தனர் எனவும் கூறப்பட்டது. ஒருவர் வாழ்நாள் பூராவும் கட்சிக்கான விசுவாச பிரமாணத்தை மெக்காவில் எடுத்ததாகவும் அறிய வருகிறது. இப்படி இருந்தும் கூட தேர்தலின் பின் கட்சியின் உடைவு தவிர்க்க முடியாதது என வதந்தி பரப்புவோர் கூறித் திரிந்தனர். கடந்த காலங்களில் பிரிந்துபோதல் வழமையான நிகழ்வாக இருந்த காரணத்தால் இப்படி நடக்காது என யாரும் எதிர்வாதம் செய்ய முடியவில்லை.

இருப்பினும் இப்போதைய வதந்தி உன்மையாகாது என நினைக்க வைக்கும் ஒரு அம்சம் காணப்பட்டது. இம்முறை கட்சியின் தலைவர் சேகு தாவூத் கட்சிமாறும் குழுவுக்கு தலைமை தாங்குவார் என கூறப்பட்டது.

பஷீர் சேகு தாவூத் தான் ரவூப் ஹக்கீமின் விசுவாசி என்றும் தீவிர கட்சிப்பற்றுள்ளவர் என்றும் பல முறை நிறுவியிருந்தார். சேகு தாவூத், முதன் முறையாக ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பின் (ஈரோஸ்)) சுயேச்சை பட்டியலூடாக 1989 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர். இவர் தொடர்ந்து நாடாளுமன்றம் வராமலிருந்து தனது உறுப்புரிமையை துறந்த அழகு குணசீலனின் இடத்தை நிரப்பியவர்.

சேகு தாவூத்

பின்னர் சேகுதாவூத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து ஹக்கீமின் பற்றுறுதி மிக்க சீடன் ஆகினார். சேகு தாவூத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக முணுமுணுப்புகள் காணப்பட்டபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்கட்சி அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை.

மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சேகுதாவூத்தும் அம்பாறை நிந்தவூரை சேர்ந்த எஸ்.எம். ஹஸன் அலியும் ரவூப் ஹக்கீமின் வலதுகை இடது கையாக கருதப்பட்டவர்கள். ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைவராக இருக்க சேகு தாவூத் தவிசாளராகவும் ஹஸன் அலி செயலாளராகவும் உள்ளனர்.

இந்த மூவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டார்கள்.

ஹக்கீமும் ஹஸன் அலியும் தேசிய பட்டியலூடாக மீண்டும் நாடாளுமன்றம் வந்த போதிலும் சேகு தாவூத் மாகாண சபையில் 2010 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
ஹக்கீமுடனான நன்கறியப்பட்ட நெருக்கத்தின் பின்னணியில் சேகு தாவூத் தலைமை தாங்கி கட்சித் தாவல் ஒன்றை மேற்கொள்வார் என்பது கிட்டத்திட்ட அசாத்தியமானதாகவே காணப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த சில நிகழ்வுகள் காரணமாக எதிர்பாராதது நடந்தேறியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூவர் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை விற்பன்னர் உடன் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபபட்டுள்ளனர் என்பது சகலருக்கும் தெரிந்த இரகசியம் ஆயிற்று.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் ஆறு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு தேசிய பட்டியலூடாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். கண்டியிலிருந்து வந்த ரவூப் ஹக்கீம, வன்னியிலிருந்து வந்த நூர்தீன் மஷுர், திருகோணமலையிலிருந்து வந்த எஸ்.எம். தௌபீக், மட்டக்களப்பு சேகு தாவூத், அம்பாறை எச்.எம்.எம். ஹரிஸ், பைஸல் காஸிம் ஆகியோர் தேர்தலில் தெரிவாகியவர்கள். ஹஸன் அலி, களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எம். அஸ்லாம் ஆகியோர் தேசியப்பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டவர்கள்.

எட்டு எம்பிக்கள்

இந்த நாடாளுமன்ற உருப்பினர்களில் பஷீர் சேது தாவூத், நூர்தீன் மஷுர், பைஸல் காஸும் ஆகியோர் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பேச்சு வார்த்தையாளருடன் பேச்சுகளில் ஈடுப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுலிருந்து பிரியப்போவதாகவும் செய்திகள் வந்தன. அரசாங்கத்திடம் 144 அங்கத்தவர்கள் இருந்ததாலும் அதனை வலுப்படுத்த மேலும் ஆதரவு தேவைப்படாததாலும் ராஜபக்ஷ அரசாங்கம் இந்த மூவரையும் கவர்ந்திழுப்பதில் அக்கறை காட்டாது போனமை ஒரு தடங்கலுக்கு வழிகோலியது. அமைச்சுப் பதவிகளை ஒதுக்குவதும் பிரச்சினையாகக் காணப்பட்டது.

இன்னொரு பக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு நிரந்தர ஆதரவு தெரிவிக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டவர்களாகவும் இருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து முறைசார் ரீதியாக பிரிந்து கட்சி மாறும்போது நீதிமன்றம் அதை எப்படி பார்க்கப் போகின்றது என்பதுவும் நிச்சயமற்றதாக காணப்பட்டது. அண்மையில் நீதிமன்றம் ‘கட்சி தாவலுக்கு’ எதிராக எந்த தீர்ப்பையும் கொடுத்திராத போதும் இனிமேலும் எதிரான தீர்ப்பை வழங்க மாட்டாது என தட்டிக் கழித்துவிட முடியாது.

எதிர்பார்க்கப்பட்ட பிளவு கிடப்பில் போடப்பட்டிருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அரசாங்க பக்கம் சேரும்படி அழுத்தம் அதிகரித்துச் சென்றது. இதற்கான பிரதான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சிப் பூசல் ஆகும்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் பல வருடங்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க விதிக்கப்பட்டுள்ளது என்பதை மகத்தான அப்பெரும் கட்சி அற்பவிடயங்கள் மீதான பூசல்களும் அதிகாரப்போட்டியும் தெளிவாக எடுத்துக் காட்டின. ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து இருக்கும் வரை அதிகாரத்தின் ருசி எதுவும் அனுபவிக்காமல் போகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலைமையில் எச்.எச்.எம். ஹரிஸ், எஸ்.எம். தௌபீக் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணையும் விருப்பம் கொண்டனர். ஒப்பீட்டளவில் அபிவிருத்தி குறைந்த பிரதேசங்களிலிருந்து வந்த சிறுபான்மை இனப் பிரதிகளுக்கு தமது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ளவும் தமது வாக்காளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் சில அரசியல் அதிகாரங்கள் தேவை.

இருப்பினும் ஹரிஸ், தௌபீக் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகவே அரசாங்கத்தில் இணைய விரும்பினர். கட்சியை விட்டு விலகிப்போக அவர்கள் தயங்கினர். இந்த வகையில் இந்த இருவரும் தேவையேற்படின் கட்சியை விட்டு விலகிப்போக தயாராக இருந்த மூவரிலிருந்து வேறுபட்டனர்.

சுருங்கக் கூறின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்துபேர் அரசாங்கத்துடன் சேர விரும்பிய சூழல் உருவாகியிருந்தது. இவர்களில் மூவர் தனிக்குழுவாக இணைய விரும்பும்போது இருவர் கட்சியாக அரசாங்கத்தில் சேர விரும்பினர். ஹக்கீம், ஹஸன் அலி, அஸ்லாம் ஆகியோர் மட்டுமே எதிரணியில் இருக்க விரும்பினர் போலத் தெரிந்தது.
ஊகங்கள்

இதே சமயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாக்கீர் மாக்கர் நிலையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய ஒரு விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீமுக்கு பாதகமான பிரசித்தம் கொடுக்கப்பட்டது. மக்கள் திசைப்பட்ட அரசியலமைப்பை ஏற்படுத்தவதற்கு மக்களின் ஆதரவை பெறுதல் என்னும் கருப்பொருளில் அங்கு பேசிய அவர் நீதித்துறைபற்றி சில விடயங்களை தொட்டுச்சென்றார் என கூறப்படுகிறது. இதை வைத்து ஹக்கீம் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்ட முயற்சி நடந்தது என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் நடந்த சந்திப்பில் பங்குபற்றும்படி ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இதற்கு முன்பே ரவூப்ஹக்கீம் கல்முனையில் புதிய சந்தை திறப்பு விழாவில் பங்குபற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஹக்கீம் கல்முனையில் பேசும் போது இது பற்றிக் கூறி, தான் அங்கு போகாமல் விட்டதற்கான காரணத்தை ஜனாதிபதி புரிந்துகொள்வார் எனக் குறிப்பிட்டார்.

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மறைவின் பத்தாவது வருட நினைவு தினம் (செப்.16) நெருங்கிக் கொண்டிருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் இதனை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜனாதிபதி ராஜபக்ஷ ஒரு கூட்டத்துக்கு தலைமை வகிக்க நாடாளுமன்றம் வந்தபோது ரவூப் ஹக்கீம் அவரை நேரில் சந்தித்து பிரதம விருந்தினராக வரும்படி அழைப்பு விடுத்தார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு நினைவு தினத்துக்கு வந்தார். இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கப் பக்கம் சாய்ந்து கொண்டிருப்பதாக ஊகங்கள் அதிகம் வரத் தொடங்கின.

அதேநேரம் ஆச்சரியமாக பல நிகழ்வுகள் நடந்தேறின. முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை கொண்டுவரும் சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

திடீரென ஜனாதிபதி அரசியல் இணக்கப்பாட்டுக்கான முயற்சிகளை கைவிட்டு விட்டு, ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகளை அதிகரிக்கும் தனது பழைய திட்டத்துக்கு மீண்டும் வந்தார். அவரிடம் வேறு யாப்புத் திருத்த யோசனைகளும் இருந்தன.

திட்டத்தை மாற்றிக்கொண்டமையால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டது. அரசாங்கத்திடம் ஏற்கெனவே இருந்த 144 இற்கு மேலாக அப்துல் காதர், பி.திகாம்பரம், பிரபா கணேசன் ஆகிய தத்தம் கட்சிகளுடன் கருத்து வேறுபாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

குறைந்தபட்சம் ஐந்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களாவது வெளியேறி அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பர் என ஊகங்கள் பலமாக அடிபடத் தொடங்கின. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சிலரும் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பார் என்ற வதந்தியும் பரவியது.

பழைய இடதுசாரிகள்

எதிர்பாராத பகுதியிலிருந்து ஜனாதிபதியின் திட்டத்துக்கு பிரச்சினை வரத் தொடங்கியது. அரசாங்கத்துள் இருந்த மூன்று சமசமாஜிகள், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் அடங்கிய பழைய இடதுசாரிகள் ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கும் தடவைகளை அதிகரிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இந்த இரண்டு கட்சிகளும் உத்தேச திருத்தங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தது. ஆக, மிஞ்சி இவர்கள் வாக்களிக்காமல் விடலாம். ஆக, மோசமாக எதிர்த்து வாக்களிக்கலாம்.

இந்த இடதுசாரி எதிர்ப்பு ஜனாதிபதியின் விருப்பத் தெரிவு ஒழுங்கில் சில மாற்றங்களை வேண்டி நின்றது. ஐந்து இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் முன்னால் கேள்விக் குறி காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி இதனை சமன்செய்ய வேறு இடம் தேட வேண்டியிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கவர்ந்திழுக்கும் சாத்தியம் ஆசைக்காட்டிற்று.

ஜனாதிபதி வேகமாக செயற்பட்டார். கண்டியில் எசல பெரஹர கொண்டாட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு அழைக்கப்பட்டார். அங்கு ஜனாதிபதி இல்லத்தில் நாட்டின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் மட்டும் கலந்துக் கொண்டு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

விளைந்த அரசியல்வாதியான ஜனாதிபதி ராஜபக்ஷ எதையும் மறைக்காமல் நேரே விடயத்துக்கு வந்தார். பெற்றுக்கொள்ள அவருக்கு வாக்குகள் தேவைப்பட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் வாக்குகள் இருந்தன. ரவூப் ஹக்கீமின் கட்சி அதை கொடுக்குமா?
ஹக்கீமும் குறைந்த ஆளில்லை. அவர் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக இதை செய்யாதுவிடின் ஜனாதிபதக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உடைத்து, தேவையான வாக்கை பெற்றுக்கொள்வதைவிட வேறு வழியில்லை. ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகிப் போகலாம்.

மறுபுறத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால் பாதகமான நிலைமையை ஒரு வாய்ப்பாக மாற்றக் கூடலாம். ஜனாதிபதிக்கு தேவைப்பட்டது யாப்பை திருத்துவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையே. சாதாரண பெரும்பான்மை மட்டும் தேவைப்படும் ஒவ்வொரு சட்டமூலத்திற்கும் அவருக்கு வாக்குகள் தேவைப்படவில்லை. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தினுள் அமைச்சுக்களை கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.

எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உடைத்து அமைச்சர் பதவிகளை கொடுப்பதற்காக பிரிந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசைகாட்டி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வது ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அமைச்சுப் பதவிகளை பலரும் கோரும் நிலைமையில் அமைச்சுப் பதவிகளை வழங்குவது சிக்கலான வேலையாகவும் காணப்பட்டது. ஜனாதிபதிக்கு தேவையாக இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான வாக்குகளே. ஒரு கட்சியை துண்டாடாமல் அதை எதிரணியிலிருந்து பெற முடியுமாயின் அது நல்லது.

நாடாளுமன்றத்தில் யாப்புத் திருத்தங்கள் கொண்டு வரும்போது எதிரணியில் இருந்தவாறே அரசாங்கத்தை ஆதரிக்க கட்சி முழுமையாக தீர்மானிக்குமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய வேண்டிய நிலைமை வராதிருப்பது சாத்தியமே. உத்தேச யாப்புத் திருத்தம் தன்னளவில், குறிப்பாக முஸ்லிம்களின் நலனையோ பொதுவாக சிறுபான்மையினரின் நலனையோ பாதிப்பதாக இல்லை. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதை எதிர்க்க வேண்டிய நியாயமான காரணம் இருக்கவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யாப்பு தொடர்பான முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவதில் மறைந்து காணப்படும் ஒரு நன்மையும் உண்டு. அண்மையில் மாறி மாறி வந்த தேர்தல்கள் இனரீதியான பிளவை தோற்றுவித்திருந்தன.

முஸ்லிம் வாக்குகள் பெருமளவில் ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக செலுத்தப்பட்டமை இனவழி முனைவாக்கம் பெற்ற நிலைமைக்கு வழிவகுத்திருந்தது.

யாப்புத் திருத்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வாக்களிப்பது, இரு பக்கத்தவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை அதிகரித்து பெரும்பான்மை – சிறுபான்மை உறவுகள் மேம்பட வழிகோலக் கூடும்.

நிதி ஒதுக்கு

ஜனாதிபதிக்கு ஆதரவு கரம் நீட்டுவதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கக் கூடிய இன்னொரு நன்மை அபிவிருத்திக்கான வளங்கள், நிதிகள் கிடைக்கக் கூடியதாக இருப்பதாகும். பி.திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோருக்கு அவர்கள் தொகுதி, தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என ஒழுங்கு செய்யப்பட்டது. அமைச்சுப் பதவிகள் தருவதாக கூறப்படவில்லை. திட்டங்களுக்காக வருடந்தோறும் 30-50 மில்லியன் வரையான நிதியை அரசாங்கம் கொடுக்க முடியும்.

இதனால் எதிரணியில் இருந்தாலும் கூட இவர்கள் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாகவிருக்கும். போதிய நிதி பெறுவதற்காக அரசாங்கத்தில் சேரும் தேவை இல்லாமல் செய்யப்படும்.

ஒருவரோடு ஒருவர் தனியாக பேசிய கூட்டம் நல்ல தொனியில் முடிந்தது.

கொழும்பு திரும்பிய ரவூப் ஹக்கீம் கட்சி முக்கியஸ்தர்களுடனும், நலன்விரும்பிகளுடனும் ஆலோசித்த பின்னர் அதியுயர் பீடம் என அழைக்கப்படும் உச்ச நிலை அதிகார அமைப்பின் கூட்டத்தை நடத்தினார். அங்கு விவாதமும் கலந்துரையாடலும் அதிகம் இடம்பெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதியாக, கட்சி எதிரணியிலிருந்தவாறே வரப்போகும் திருத்தங்களை ஆதரிக்கும் என அதியுயர் பீடம் ஏகமனதாக தீர்மானித்தது.

ரவூப் ஹக்கீம் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியையும் மூன்று வேறு அமைச்சர் பதவிகளையும் கோரியதாகவும் ஆனால்,முஸ்லிம் அமைச்சர்களான அதாவுல்லா, றிசாட் பதியுதின், ஆகியோர் ரவூப் ஹக்கீமை உள்வாங்குவதை அனுமதிக்க மாட்டார்கள் என்ற காரணத்தால் ஜனாதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வந்திருந்தன.

இதனை வன்மையாக மறுத்த ரவூப் ஹக்கீம், தான் ஜனாதிபதியால் மறுக்கப்படும் வகையில் இவ்வாரான எதையும் கேட்கவில்லை என கூறினார். பின்னர் ஊடகவியலாளருடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான தகவல்களை மறுத்ததுடன் ஜனாதிபதி இந்த உண்மைக்கு சாட்சியாவார் என அறிவித்தது.

இந்த நேரத்தில் அரசாங்கத்துடன் சேரும் தேவையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருத்தில் எடுக்கும் பெறுமதியற்றதென தட்டிக்கழித்துவிட்டது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வரும் பட்சத்தில் சேருவதற்கு முன்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட அங்கத்தினர்கள் கருதுகின்றனர். அரசாங்கத்துடன் சேருவதற்கான எழுந்தமானமான ஏற்பாடுகள் கருத்தில் எடுக்கப்பட்ட மாட்டாதென கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இருந்த நெருக்கடிகள் இருபகுதிக்கும் வெற்றி என்ற வகையில் முடிந்துள்ளதாக தெரிகிறது. அமைச்சர் பதவிகளை ஒதுக்காமல் யாப்பை திருத்துவதற்கு அவசியமான பெரும்பான்மையை பெறத் தேவையான வாக்குகளில் மேலும் எட்டை ஜனாதிபதி நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும், கட்சியின் ஒற்றுமையை பேணிக்கொள்ளும் அதே சமயம் எதிரணியில் இருந்தவாறே குறிப்பான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியையும் பெற்றுக்கொள்ளும்.

இந்த ஏற்பாடு குறித்து முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே எதிர்வரும் காலங்களில் பெரும் கருத்து முரண்பாடு ஏற்படலாம். அதே போல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழ் – முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் உருவாகிவரும் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். அரசாங்கம் தற்போது கடைப்பிடிக்கும் தந்திரரோபாயத்தை மாற்றியமைத்து எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டால் அல்லது சிறுபான்மை இனத்தவர்களை பாதிக்கும் சட்டங்களை கொண்டுவந்தால் நிலைமை மாறிப்போகும்.

முன்னைய நாடாளுமன்றத்தில் கட்சி பிளவு படுவதை தடுக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்தது. இந்த முறை கட்சி பிளவுபடுவதை தடுக்க இன்னொரு வழியாக எதிரணியில் இருந்தவாறே அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் இந்த சாமர்த்தியமான சுழியோட்டத்தினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒற்றுமையை உறுதி செய்துவிட்டாரா அல்லது இது ஒரு தற்காலிக ஓய்வா என்பதை காலம்தான் கூறும். [நன்றி: தமிழ் மிரர்]

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

04-09-2010 ஆம் திகதி வெளிவந்த டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.

காணொலி: 'நிலைத்து நிற்கும் தமிழர் நாகரீகம்' - இராஜ இராஜ சோழன்

இராஜ இராஜ சோழன் திரைப்படக் காட்சி:

"எத்தனையோ வல்லரசுகளின் நாகரீகங்கள் தோன்றி அழிந்த போதும் கூட, நமது தமிழரின் நாகரீகம் மட்டும் அழியாதிருப்பதற்கு காரணமே, எதையும் மறந்து, மன்னித்து விடும் தமிழருக்கு இருப்பதால் தான்.."

இராஜ இராஜ சோழன் 1973 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியிடப்பட்டது.

காணொலி: 'தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே'

[பி.பி.சி. தமிழோசை] பெருவுடையார் கோயில், ராஜ ராஜேஸ்வரம், பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன.

இராஜ இராஜ சோழன் திரைப் படப் பாடல்

தென் இந்தியாவை ஆண்ட மிகவும் சக்தி வாய்ந்த அரசவம்சமான சோழர்களின் வலிமையையும், நாட்டின் வளத்தையும், கலை நயத்தையும் காலத்தை கடந்து பறைசாற்றும் சின்னமாக இருக்கிறது இந்தக் கற்கோயில்.

இந்தக் கோயில் 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரிந்தாலும் கோயிலை கட்டும் பணியை ராஜ ராஜன் எப்போது ஆரம்பித்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர் நாகசாமி.

இக் கோயில் முழுவதும் பாறங்கற்களால் கட்டப்பட்டது. கற்களை தேவைப்படும் அளவுக்கு செதுக்கி ஒன்றன் மேல் மற்றொன்றை பொருத்தி இக் கோபுரம் அமைக்கப்பட்டது. கம்பீரமாக 60 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கும் 13 அடுக்குகளைக் கொண்ட இக் கோபுரத்தின் உட் பகுதி வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. 240 மீட்டர் நீளமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட இக்கோயிலின் பிரதான தெய்வமாக இருக்கும் சிவலிங்கம் 5 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டது, நந்தியும் மிகப் பெரியது.

அக்காலத்தில் இந்தியாவின் உயரமான கட்டிடமாக இது இருந்தது என்று கூறும் ஆய்வாளர்கள், கோபுரத்தின் சிகரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுப்பட்டுத்தப்பட்ட அளவில் சுண்ணாம்புப் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

கோயிலை கட்டப் பயன்படுத்தப்பட்ட கிரனைட் வகைக் கற்கள் மிகவும் கடினமானவை. தொழில் நுட்பம் வளர்ந்த தற்காலத்தே - கற்களை உடைத்து சிற்பம் வடிப்பது கடினமான பணி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதை நம் முன்னோர்கள் எப்படி சாதித்தனர்? என்பது பெரிய கேள்வியாகவே இருந்து வருகிறது.

உளியையும் சம்மட்டியையும் வைத்தே இக் கோயிலை கட்டியதாகக் கூறுகிறார் குமரிக் கடலில் வள்ளுவருக்கு 133 அடி சிலை அமைத்த கணபதி ஸ்தபதி.

எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் அதே அடிப்படை தத்துவம் இங்கும் பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்தக் கோயிலின் முதல் குடமுழுக்க நடந்த சில காலத்தே ராஜ ராஜன் இறந்து விட - அவர் மகன் முதலாம் ராஜேந்திரன் - பெரிய கோயிலுக்காக ராஜ ராஜன் வழங்கிய நில மான்யங்கள் பலவற்றை தான் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு மாற்றி விட்டார்.

பெரிய கோயிலை விட பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டுவதற்கு கட்டிடக் கலைஞர்களையும் - சிற்ப வல்லுனர்களையும் ரஜேந்திரன் அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு விதத்தில் பெரிய கோயில் முற்றுப் பெறாத ஒரு கோயில் என்றே சொல்ல வேண்டும்.

உச்சி காலப் பொழுதில் கோயில் கோபுரத்தின் நிழல் கோபுரத்துக்குள்ளேயே விழும்படி உச்சி குறுகலாகவும் அடி பரந்தும் இருப்பதால் இக் கோயில் கோபுரம் நிழல் விழாக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சோழர் வரலாற்றை விளக்கும் ஏராளமான கல்வெட்டுக்களும் - அரிய ஒவியங்களும் இக் கோயிலுக்குள் உள்ளன. மலைகள் இல்லாத காவேரிப் படுகைப் பகுதியில் - இக் கோயிலை நிர்மாணிக்க - சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார் அறிஞர் நாகசாமி. பிரதான கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சிகரம் போன்ற அமைப்பு ஒரு கல்லால் அமைந்ததில்லை என்கிறார் அவர்.

சாரப்பள்ளத்தில் இருந்து மண் மேடை அமைக்கப்பட்டு இந்தக் கல் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுவது சரியல்ல என்றும் நாகசாமி கூறுகிறார்.

அதே நேரம் இந்தக் கோயில் ஆள்பவருக்கும் - அரசியல்வாதிகளுக்கும் ராசியில்லாத கோயில் என்ற கருத்தும் இருக்கிறது. பக்தர்கள் செல்லும் புனித ஸ்தலங்களின் பட்டியலில் இந்தக் கோயில் இல்லை. இருந்தும் இந்தக் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. உள்ளூர் வாசிகள் ஊரின் பெருமை இது என சிலாகித்துப் பேசுகின்றனர்.

இந்தக் கோயிலின் உட்புறம் சுத்தமாக காட்சியளித்தாலும், கோயிலுக்கு அருகேயே குப்பை கூளங்கள் கொட்டப்பட்டிருப்பதை நம்மால் காணமுடிந்தது. யுனேஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்தக் கோயிலின் பிரதான கோபுரத்துக்கு சில அடி தூரத்திலேயே மேற்கொள்ளப்பட்ட ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி
நீதிமன்றத் தலையீட்டால்தான் சில வாரங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டது.

பல புயல்களையும், 6 நில நடுக்கங்களையும், ஒரு பெரும் தீ விபத்தையும் சந்தித்த இத் திருக்கோயில் மனிதத் தலையீட்டை தாண்டி அடுத்த ஆயிரம் ஆண்டுகளை எப்படி சந்திக்கப் போகிறது என்ற கவலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கோயில் விளக்கை ஏற்றுவதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்காகவே ஆடுகளையும் மாடுகளையும் தானமளித்துள்ளான் ராஜ ராஜ சோழன். ஆனால் இன்றோ கோயிலில் மின்சாரத்தால் இயங்கும் மணியும் மேளமும் - மங்கல வாத்தியத்துக்கு பதிலாக ஒலிக்கின்றன. [நன்றி: பி.பி.சி. தமிழோசை]

September 19, 2010

mp3: எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் - பி.பி.சி தமிழோசை செவ்வி

லங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய இடங்களில் இன்று சனிக்கிழமை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆனந்தி சசிதரன் அவர்கள் இது தொடர்பாக தமிழோசைக்கு கொடுத்த செவ்வியினை இங்கு கேட்கலாம் ~ 18 செப்டம்பர், 2010

இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார். அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நகரங்களுக்குச் செல்வதோடு, இறுதி கட்ட யுத்தம் அரங்கேறிய நந்திக்கடல் பகுதிக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு செல்லவிருக்கின்றனர்.

இந்தக் குழுவின் விசாரணைகள் பல பொதுமக்கள் முன்னிலையில் நடக்கின்றன என்றாலும், குறிப்பிட்ட இந்த விசாரணைகளுக்கு பிபிசி செய்தியாளர்கள் வந்து செய்தி சேகரிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மறுப்புக்கு காரணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. [நன்றி: பி.பி.சி தமிழோசை]

காணொலி: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். லண்டன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி

க்கள் திலகம் எம்.ஜி.ஆர். லண்டன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி:

"முதன் முதலாக நான் எழுதப் படிக்கத் தெரிந்த மொழி தமிழ். நான் அறிவு வந்த பருவம் முதல், நான் பார்த்துக் கொண்டு பழகிக் கொண்டிருக்கிற மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது, சூடேறிக்கொண்டிருக்கிறது, சூடு தணியாமல் இருக்கிறதென்றால், நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால், தமிழ் கூறும் நல் உலகம் தந்த வாய்ப்பாகும்"

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்"

September 16, 2010

காணொலி: 'நீர் நினைத்தால்...பெண் நினைத்தால்'

பாடல்: நதியே நதியே காதல் நதியே
படம்: ரிதம்
பாடல் வரிகள்; கவிஞர் வைரமுத்து

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு
ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...
கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

September 11, 2010

காணொலி: 'உன் ஞாபகம் நீங்காமல்...என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது'

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

(நின்னுக்கோரி)

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல்...என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

(நின்னுக்கோரி)

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா

September 08, 2010

காணொலி: 'பூவிலங்கு நாயகன்' நடிகர் முரளி காலமானார்

[பி.பி.சி தமிழோசை] பிரபல தமி்ழ்த் திரைப்பட நடிகர் முரளி, புதனன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

ஒரு மணி அடித்தால்

1984-ம் ஆண்டு, பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. புதுவசந்தம், இதயம், பொற்காலம் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், தனது கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருந்தார்.

அழுத்தமான பாத்திரங்கள் மட்டுமன்றி, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் அவர் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்துக்காக, தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உள்பட பல்வேறு முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ள முரளி, கடைசியாக, தனது மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமான பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். 100 வது படித்தில் நடிக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த முரளி, இன்று அகால மரணமடைந்துவிட்டார்.

அவரது உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

'போட்டேனே பூவிலங்கு'

ஆத்தாடி பாவாடை காத்தாட

இதயமே இதயமே

September 07, 2010

காணொலி: பித்துக்குளி முருகதாஸ் ~ அலைபாயுதே கண்ணா: ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி-தெகிவளை

பித்துக்குளி முருகதாஸ் ~ அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே

ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணுமூர்த்தி தேவஸ்தானம் நெடிமால-தெகிவளை
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி - செப்டம்பர் 1, 2010 ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

அலைபாயுதே கண்ணா
அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா........

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா

உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ

கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோகதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ

குழலூதிடும் பொழுதுஆறிடும் குறைகள் போலவே மனதில்
வேதனை மிகவுற

(அலைபாயுதே......)

பாடல்: அலைபாயுதே கண்ணா
வரிகள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம்: கானடா

September 01, 2010

MP3 பாரதி பாடல்: 'சென்றதினி மீளாது'

மாகாவி சுப்பிரமணிய பாரதியார் வடித்த பாடல்:

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

பாடுபவர்: ராஜ்குமார் பாரதி

DSCF1044ootru.JPG

மட்டக்களப்பு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொதுசன நூல் நிலையத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவுருவப் படம்-படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று வினை யாடின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெல்லம் அறிந்துபோம், திரும்பி வாரா.