காணொலி: "கண் திறந்த தேசம் அங்கே ...." - கவிஞர் வைரமுத்து
கன்னத்தில் முத்தமிட்டால் - திரைப்படத்திலிருந்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கவிஞர் வைரமுத்து வரிகள்:
Vidai kodu by Job - Straight from the heart ~ "விடை கொடு எங்கள் நாடே" ஜாப் பாடும் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படப் பாடல் ~
விடைகொடு எங்கள் நாடே.....
கடல் வாசல் தெளிக்கும் வீடே.....
பனைமரக்காடே பறவைகள் கூடே....
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா??....
உதட்டில் புன்னகை புதைத்தோம் .....
உயிரை உடம்புக்குள் புதைத்தோம் ....
வெறுங்கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...
கந்தல் ஆனாலும் தாய்மடி போல் ஒரு சுகம் வருமா?? வருமா??
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் சுதந்திரம் வருமா?? வருமா??...
கண் திறந்த தேசம் அங்கே ....
கண் மூடும் தேசம் எங்கே???
பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்.....
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்..
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம்.....
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்..
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு புகையிலே புதைத்தோம்...
முன்னிரவில் மலரில் கிடந்தோம் பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்....
கடல் நீர் பறவையாய் இருந்தால் சந்திப்போம்...
மனமே மலைகளாய் வாழ்ந்தால் சந்திப்போம்...
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்....

