படக் கோவை: அன்பு பெருகப் பெருகத்தான், அமைதி அடையும் உலகமே
துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஞாபகார்த்த கண்காட்சி, பெப்ரவரி 6ஆம் திததி கொழும்பு, தேசிய நுண் கலை மன்றத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மூத்த புதல்வரும், குடியுரிமை செயற்பாட்டாளருமாகிய மூன்றாம் மார்ட்டின் லூதர் கிங்கினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நெஞ்சை நெகிழ்க்கும் ஆத்ம இராகம்
அன்பு
பட்டை போடப் போடத்தான்
பள பளக்கும் வைரமே
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினு மினுக்கும் தங்கமே
அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989)

