காணொலி: சரத் பொன்சேகா கைது எதிர்ப்பு அறவழிப் போராட்டம் மீது தாக்குதல்
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பிலும், சிறிலங்காவின் வேறு பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்களும் காவல் துறையினரும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கொழும்பு-விகல்ப பொதுசன ஊடகவியல் தொடர்பு நிறுவனம் வழங்கும் காணொலி ~ சிங்களம், ஆங்கில மொழிகளில்
காவல் துறையினரின் பாதுகாப்புடனேயே ஆளும் கட்சியினர் தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

