ஊற்று

இடம் பெயர்ந்த தமிழர் வாக்களிப்பதில் இடையூறுகள்

நெருக்கமான போட்டியில் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி; ஆனால் தேர்தலில் அவர்களுக்கு ஆர்வமில்லை - ஐ. நா. நிறுவன ஆய்வு

[ புதினப்பலகை ] ல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களும் புதிதாகச் சிறிலங்காவுக்குத் திரும்பியவர்களும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

tttc11o.jpg

'மாணிக்கம் பண்ணை" (Menik Farm) வவுனியா தடுப்பு முகாமில் கையடக்க தொலைபேசியில் உரையாடும் பெரியவர்-டிசம்பர் 23-ஏ.பி நிறுவன படம்

இரின் [Integrated Regional Information Networks - IRIN] எனப்படுவது - ஐ. நா.வின் மனிதார்ந்த விவகார ஒருங்கிணைப்புச் செயலகத்தின் [UN Office for Coordination of Humanitarian Affairs] ஒர் ஆய்வு நிறுவனமாகும்.

இரின் நிறுவன ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் இடம்பெற்ற போரை அடுத்து இடம் பெயர்ந்த 280,000 தமிழரில் சுமார் 170,000 பேர் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கிருப்போரும், சொந்த இடங்களுக்குத் திரும்பியவர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கக் கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.

IRIN11B.jpg

கட்சி ஆதரவாளர்-ஐ. நா படம்

இது தொடர்பாக இரின் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வெளியிட்ட நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பின் [People's Action for Free and Fair Elections - PAFFREL] பிரதம நிறைவேற்று அதிகாரி றோகண ஹெற்றியாராச்சி - " இடம் பெயர்ந்து மீளக்குடியமர்ந்த பலர் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை. வாக்காளர் அட்டைகளுக்காக சுமார் 35 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்." என்று கூறியுள்ளார்.

அதே வேளை, Campaign for Free and Fair Elections - CaFFE எனப்படும் மற்றொரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று அதிகாரி யான கீர்த்தி தென்னக்கோன் "யார் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

சிலர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து விண்ணப்பித்துள்ளனர், அனால், அவர்கள் அண்மையில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அவர்களின் வாக்காளர் அட்டைகள் முகாம்களுக்கே அனுப்ப்பட்டுள்ளன. அத்துடன் வாக்களிப்பு நிலையங்களும் அங்கேயே அமைக்கப்படவுள்ளன. இது முக்கியமான ஒரு பிரச்சனையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

CaFFE அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களச் சந்தித்துத் தரவுகளைச் சேகரித்த போது,அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்க விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கனகராயன்குளத்தில குடியமர்த்தப்பட்ட 56 குடும்பங்களைச் சந்தித்த போது அவர்களில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்களே வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

வன்னியின் ஏனைய இடங்களிலும் இது போலவே சிறிய எண்ணிக்கையானோரே பதிவுசெய்துள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வேண்டுமானால் வாக்களிப்பு நிலையங்களுக்கும் அங்கிருந்தும் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார் தென்னக்கோன்.

கடந்த 11ம் திகதி "மெனிக் பாம்" [மாணிக்கம் பண்ணை] முகாமுக்குச் சென்றிருந்த போது அங்கிருப்பவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலே உள்ளது.

தாம் பல படிவங்களை நிரப்பிக் கொடுதத்தாகவும் ஆனால் அதற்குப் பிறகு எந்தத் தகவலும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் அங்குள்ள மக்கள் கூறினர்.

அங்கு டிசம்பர் மாதக் கடைசியில் 108,000 பேர் இருப்பதாக அரசாங்கத் தகவல் கூறுகிறது.

இரு தசாப்தப் போரினால் வன்னியில் வாக்காளர்கள் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

1989-இற்குப் பிறகு இங்க சரியான முறையில் வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்லும் போது வாக்களாராகப் பதிவு செய்யவில்லை என்று இலகுவாக மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 21மில்லியன் வாக்காளர்களில் 14 வீதமான தமிழர்கள் வாக்களிப்பில ஆர்வம் காட்டாதிருப்பது வாக்கு மோசடிகள் இடம்பெற வழிவகுக்கும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார் PAFFREL அமைப்பின் அதிகாரி ஹெற்றியாராச்சி.

IRIN111A.jpg

பிரசார ஊர்தி-ஐ. நா படம்

அங்கு இன்னமும் பதற்றமான சூழலே உள்ளது என்று கூறும் PAFFREL அமைப்பு அந்தப் பகுதிகளில் அதிக அளவிலான உள்நாட்டு வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேர்தல் கண்காணிப்பிற்கு அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளது.

பிரதான வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் வடக்கிலுள்ள தமிழர்களின் வாக்குகளிலேயே குறிவைத்துள்ளனர்.

அது தேர்தல் முடிவுகளில் முக்கியமானதாக அமையும் என்று கருதப்படுகிறது.

போர் முடிந்த பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

"நெருக்கமான போட்டி எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழர்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஆனால் - அவர்கள் சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ராஜபக்ச என இரண்டுபட்டு நிற்கிறார்கள் என்று கூறுகிறார் தேசிய சமாதானப் பேரவையின் [National Peace Council] பணிப்பாளரான ஜெகான் பெரேரா.

இரு பிரதான வேட்பாளர்களுமே ஆதரவு கோரிக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி - மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துள்ள சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதே வேளை - யாழப்பாணத்தில் நடந்த பேரணியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச - போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கை மீளக் கட்டியெழுப்பி மேம்படுத்தப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என இரின் நிறுவனத்தின் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை