திரை இசை: சம்போ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சம்போ, சிவ சம்போ
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ
மனித உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறு நாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன செய்ய நீ எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே
கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று
காலங்கள் போனாலோ தின்னாநே என்பார்கள்
மது உண்டு , பெண் உண்டு , சோறு உண்டு, சுகம் உண்டு,
மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ
லாராலலாரிற லாராலலாரிற லாராலலாரிற சிவ சம்போ
லாராலலாரிற லாராலலாரிற லாராலலாரிற சிவ சம்போ
திரைப்படம்: நினத்தாலே இனிக்கும்
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடி இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்

