பக்தியிசை: பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும்

நல்லூர் கந்தன் படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
வெங்கலகுரலோன் சீர்காழி கோவிந்தராஜன்: பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலே போதும்
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்...சண்முகா...
உன்னிரு பதம் நினந்து
அன்புடன் தினம் பணிந்து....முருகா...முருகா
திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து
பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா
வண்ண மயில் ஏறும் வடி வேல் அழகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா
பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலே போதும்...முருகா



