ஊற்று

திரைஇசை: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

பாடல்: எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
பாடல்: புலமைப்பித்தன்
இசை: இளையராஜா
தொகுப்பு: பாரதி (திரைப்படம்)

DSCF1044ootru.JPG

மட்டக்களப்பு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொதுசன நூல் நிலையத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவுருவப் படம்-படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ள

திலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியா
அடியும் முடியும் அறிய முடியா
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தவத்திரு உளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுதலைக்கு நெருப்பவன் கொற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
குடுக்கலில் சரம் கொடுத்தவன் தலை முடிற்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
கொற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

DSCF1043ootru.JPG

மட்டக்களப்பு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொதுசன நூல் நிலையத்தில்-படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ள

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை