படத் திரட்டும் ஒலி வடிவமும்: சரஸ்வதி பூசை, செப் 27
செப் 27, சரஸ்வதி பூசை சிறப்பு பக்கம்:
காயத்திரி மந்திரம் ~ எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
சுப நேரத்தில் வைக்கப்பட்ட கும்பம்
வீட்டு வணக்க அறையில் குத்து விளக்கேற்றம்
நவராத்திரிக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள வீட்டு வணக்க அறை
இசைக் குயில் பி. சுசீலா வழங்கும் சரஸ்வதி வணக்க பாடல்கள்:
கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை வழங்கும்
ஸ்ருதியோடு லயபாவஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதாவும் வீணையில் எழும் நாதம்
வீணையில் எழும் நாதம்
தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம்
வாணி உன் சக்ரபாதம்
வானகமும் வையகமும் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட
தருவாய் சங்கீதம்
தாமரைபூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே - செந்
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன் பாதம் எந் நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே - செந்
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே
மாணிக்க வீணை ஏந்தும்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
நன்றி ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை~ dushi.pillai@gmail.com












Comments
Very nice write up on Saraswathi pooja day with appropriate pictures and Kalivani songs by S.P,Bala
& P.Susila's making all at homes listen to the sweet songs in silence and prayers Will save this for our daily prayers Thankk You
Posted by: Santhi | September 27, 2009 05:17 PM