ஊற்று

காணொளி: கவிஞர் வாலி வடித்த "மூன்று கொடிகளின் வதிவிடம்"

'பூவா தலையா' திரைப்படத்தில்:

துரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

VaaliOotru.jpgகாஞ்சித்தலைவன் கோயில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனி சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ

மதுரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ
புதுவை நகரில் புரட்சி கவியின் குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே - கவிஞர் வாலி

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை