திரை இசை: பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்..தெய்வம்
பாடல்: பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்
திரைப் படம்: கண்ணா நலமா
பாடியவர்கள்: டி.எம். சௌந்திர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி
பாடல் வரிகள்:

பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை ... இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என் கிறார்கள்
பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்
ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ ... நகல் யாரோ
அசல் யாரோ நகல் யாரோ
அறியேனென்று அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று
முடிவில் ஒன்று
இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே ... காவலா, இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..
காவலன் சென்றான் ..இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் .....
மன்னா ...மன்னா ஆஆ
அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும் புன்னகை புரிகின்றாள்
புன்னகை புரிகின்றாள்
பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனைத் தடுக்கின்றாள்
இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம் மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை
சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..
பக்தியிலும் அன்னை தான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள் வளத்த செல்வம் செல்வம்
சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..
பதியம் வைத்த மரம் புதிய தோட்டம் தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும் அதன் சொந்தமாவ்தில்லை
சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..
உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை
சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..
பூவும் மஞ்சளுடன் பொங்கும் தேவி அவள் புவனேச்வரி
சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..
பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி
சக்தி ஓம் .. சக்தி ஓம் ...
பாசம் பொக்கி வரும் தேவி சக்தி அவள் ஜெகதீஸ்வரி
சக்தி ஓம் .. சக்தி ஓம் .
.
பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமேஸ்வரி
சக்தி ஓம் .. சக்தி ஓம் .

