தமிழக நிதி அமைச்சர் க. அன்பழகன்: "தமிழர்களுக்கு தாய் மொழி உணர்வு குறைவு"
தமிழர்களுக்கு தாய் மொழி உணர்வு குறைவு என்று தமிழக நிதி அமைச்சர் க. அன்பழகன் வேதனை தெரிவித்தார்.
இப்படி சென்னையில் தொடங்கிய "உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, புலம் பெயர்ந்த தமிழர் சந்திப்பு -2009" மாநாட்டில் அவர் பேசியது தொடர்பாக ஜனவரி 7ஆம் திகதி, தமிழக நாளேடு தினமணியில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு:
மாநாட்டில் நிதி அமைச்சர் க. அன்பழகன் மேலும் பேசுகையில்:
மற்றவர்களைவிட தமிழர்களுக்கு தாய்மொழி உணர்வு குறைவு. தமிழர்கள் சிறுபான்மை யாக இருக்கும் இடங்களில் தாய் மொழி உணர்வோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் சீரழிந்த தமிழர்களாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தமிழர்களுக்கு, தமிழ் தலைவருக்கு இருக்க வேண் டிய மதிப்பு இல்லை. மலேசியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்க ளில் நல்ல தமிழில் பேசுகிறார்கள். ஜாதி, மத உணர்வுகள் அதிகமாகும் போது தமிழ் உணர்வு குறைந்து விடுகிறது. தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கு வளமாக இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் விருப்பம்.
"நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ, அந்த நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும்'' என்று அண்ணா ஒருமுறை மலேசியாவில் பேசினார். அதனை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
முதன்முறையாக உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் நமக்கு பின்னால் ஒரு சமூகம் இருக்கிறது என்ற பலத்தைக் கொடுக்கிறது என்றார் க. அன்பழகன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு: மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி யில் உள்ள அரசுகள் இருப்பதால் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியால் உலகமே ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் இந்தியா வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கும், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமும் தான் காரணம்.
தற்போது உள் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ள ப. சிதம்பரம் அத்துறை யிலும் முத்திரை பதிப்பார். இந்த மாநாட்டுக்கு வந்துள்ள தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.
அதற்கு மத்திய அரசு எல்லா வகையிலும் உதவ தயாராக உள்ளது என்றார்.
இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். லட்சுமணன்: ஜவாஹர்லால் நேரு, தான் எழுதிய "டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலில் மூன்று பக்கங்களுக்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வாணிபச் சிறப்பு பற்றி எழுதியுள்ளார்.
மலேசிய நாட்டுக்கு வங்கி முறையை அறிமுகப்படுத்தியது நகரத்தார்கள் தான் என்று நேரு எழுதியுள்ளார். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் நான் இந்தியா முழுவ தும் சுற்றுப் பயணம் செய்து வருகி றேன். தமிழகத்தைப் போல எந்த மாநிலமும் இந்தியாவில் வளர்ச்சி பெறவில்லை என்றார்.
கருணாநிதி வாழ்த்து: மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை தஞ்சை தமிழ் பல்க லைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வாசித்தார்.
மலேசிய முன்னாள் அமைச்சர்கள் டத்தோ எஸ். சாமிவேலு, டத்தோ வீரசிங்கம், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி ரிப்பேல், ஆஸ்திரேலிய தொழிலதிபர் மகாலிங்கம் சின்னத்தம்பி, மாநாட்டை நடத்தும் சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத், மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்ன வைக்கோ, கோவை பாரதியார் பல் கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம், தொழிலதிபர்கள் அபுபக் கர், வி.ஜி. சந்தோஷம் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

