ஊற்று

ஜனவரி 5: தமிழர் தம் விடிவுக்காய் தன்னுயிர் ஈந்த மாமனிதரின் 9ஆவது நினைவு தினம்

மிழர் தம் விடிவுக்காய் தன்னுயிர் ஈந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 9ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரருமாகிய திரு. அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வீரகேசரி பத்திரிகையில் எழுதியுள்ள நினைவுக் கட்டுரை:

லங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும். அவர் கொலை செய்யப்படும்போது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர், சட்ட வல்லுனர் மறைந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார்.

KP0105.jpgஅப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியற் கோட்பாடுகளை ஏற்று இலங்கை வாழ் தமிழர்களது பிரச்சினைகளை திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு எல்லா வழிகளிலும் செயற்பட்ட இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாமத்தை உச்சரிக்கவே யாரும் அஞ்சித் தயங்குகின்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதால் மட்டுமே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற யதார்த்தத்தை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலத்தையே சாரும்.

மேலும் தமிழர்களின் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும் இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அமரர் குமார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதால் ஆத்திரமும் துவேசமும் கொண்டிருந்த பலர் இவரைப் பார்த்து இவ்வளவு ஆதரவு இருப்பின் நீங்கள் ஏன் இன்னமும் அவர்களுடன் சேரவில்லை எனக் கேட்டபோது என்னுடைய பாசறை வேறு, அவர்களது பாசறை வேறு எனப் பதில் கூறியிருந்தார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையையும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உ?மை மீறல்களையும் சர்வதேசத்திற்கு வெளிக்கொணர்ந்த பெருமையும் அமரர் குமார் பொன்னபலத்தையே சாரும். இதற்காக இலங்கை வாழ் தமிழர்கள் அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அவரது இந்தக் கொள்கைகளால் அவரைக் கைது செய்யும் நோக்குடன் சந்திரிகா அம்மையாரின் அரசு இரகசியப் பொலிஸாரை அவரது வீட்டுக்கு அனுப்பி பல மணி நேரம் விசாரணை செய்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றது.

சந்திரிகா அம்மையார் தென்னாபிரிக்காவில் வைத்து "தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்'' எனப் பேட்டியளித்த சம்பவத்தைக் கண்டித்த ஒரே தமிழ்த் தலைவர் குமாரே ஆவார்.

அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்திரிகா அம்மையார் தொலைக்காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை கடுமையாகத் தாக்கிப் பேசி "புலிகளுக்கு ஆதரவாக இயங்குபவர்கள் கொழும்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'' என்ற கருத்தில் பேசியிருந்தார். மறுநாள் காலை குமார் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு இனியும் தான் நீண்ட காலம் வாழ்வது கடினமென என்னிடம் கூறியிருந்தார். அவரின் கொலைக்கு சந்திரிகா அரசே பொறுப்பேற்க வேண்டும்.

குமார் பொன்னம்பலம் அவர்களது கொலைச் சம்பவத்தை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான பந்துல விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையையும் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களின் விபரத்தையும் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருந்ததும் அவரால் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பல தடவைகள் நான் எனது கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தேன். தகுந்த அரசியல் தலைமையின்றி தமிழினம் அனாதையாக்கப்பட்டு படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அவ்விடத்தை நிரப்பக்கூடிய தலைமகன் குமார் பொன்னம்பலமாகவே இருந்தார்.

அதனையும் கருத்தில் கொண்டுதான் அவர் கொலை செய்யப்பட்டபோது அதியுயர் விருதான "மாமனிதர்' என்ற பட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிக் கௌரவித்தார்.

அவரைக் கொலை செய்தது யார் எனத் தெரிந்த பின்பும் அவரின் கொலைச் சம்பவத்தை விசாரித்த பொலிஸ் காவல் உத்தியோகத்தர்கள் கொலை செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டார்கள். கொலை செய்தவர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய தொண்டுகளால் அவர்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இலங்கை அரசியல் சரித்திரம் எழுதும்போது ஜனநாயக கட்சி கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் உருவாவதற்கு இவர் ஆற்றிய சேவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த விஞ்ஞாபனத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தினேஷ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், பல்கலைக்கழக மாணவர் முன்னணி முதலிய பல கட்சிகளும் சேர்ந்து உருவாக்கின. அதில் அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திட்டனர். இதை சிறிமாவோ அம்மையார் கைவிட்டிருக்காவிட்டால் தமிழர்களது பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.1985ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரக் காலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். அவர் ஆற்றிய சேவை இதுவரை யாரும் ஆற்றியதில்லை. அவர் இறந்த போது களுத்துறைச் சிறைச்சாலையில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டமை இதை நிரூபிக்கிறது.

அவர் மறைவதற்கு சற்று முன் தேர்தலை எதிர்நோக்கி தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடுவதற்கு ஒரு பட்டியலைத் தயாரித்திருந்தார். இதுவும் அவரது கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

அவரைப் போல இன்னொருவர் பிறக்கப் போவதில்லை. இவரது மூன்றாமாண்டு நினைவு மலரில் கவிதாஞ்சலி வழங்கியுள்ள மறைந்த தமிழறிஞர் க.சொக்கனவர்கள் "உள்ளும் புறத்தும் உற்றிடுபகைவர் பலராய் நின்ற போதிலுமஞ்சாச் சிங்கமாய் அவர்களின் சிறுமைகள் தன்னை உலகமறிய உரைத்ததில் குமாரிற்கு இணையாய்ச் சொல்ல எவருமே இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாமனிதர் அவர்கள் தன்னைப் பற்றிக் கூறும்போது, பின்வருமாறு கூறினார்.

"நீ உனது உயிரைப் பற்றிப் பயப்பட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். நீ வாயை மூடிக் கொண்டே வாழ வேண்டுமானால் அந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? நான் ஒரு அடிமையாக வாழ்ந்து இனத் துவேசிகளும் ஆட்சியில் உள்ளவர்களும் கூறுவனவற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்புவதை நான் ஏற்றுக் கொள்ள டியாமல் அவர்கள் கூறுவது எனது நம்பிக்கைக்கு எதிராக அமைந்தால் நான் ஏன் எனது மனச்சாட்சிக்கு எதிராக மௌனம் சாதிக்க வேண்டும்.''அவர் தான் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார் என்பதற்கு சுவர்ணவாஹினியில் பின்வருமாறு கூறினார்.

"தமிழர் அரசியல் நிலை என்ன என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆராய்ந்து பார்த்தேன். ஒரு புறம் பயங்கரமான சிங்கள அரசும், மறுபுறம் ஒரு சதமும் பெறுமதியற்ற தமிழ்க் குழுக்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றன. அவர்கள் சிங்கள அரசுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வந்தனர். எக்காரணத்தை முன்னிட்டு அவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு அறியுங்கள். அரசு அவர்களுக்கு பாதுகாப்பும் தனிப்பட்ட உதவிகளும் செய்கிறது.

இத்தகைய சூழலில் தமிழ் மக்களின் அபிலாஷையை முன்னெடுத்துச் செல்லும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் ஒரு புறம் போராடிக்கொண்டு மறு புறம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே நான் புலிகளை ஆத?க்கின்றேன்'' என்றார்.

நான் சட்டத் தொழில் ஆரம்பித்த காலம் முதல் குமார் இறக்கும் வரை அவருடன் சேர்ந்தே பணியாற்றி வந்தேன். ஒரே குடும்ப அங்கத்தவர்களைப் போல என்னுடன் பழகி வந்த குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவிற்குப் பின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை நான் ஏற்று நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நானும் எனது கட்சியும் இவரது கொள்கையைத் தொடர்ந்தும் பின்பற்றுதல், அவரது ஆத்மாவுக்கு நாம் அளிக்கும் ஆறுதல் என்றே கருதுகிறேன்.

அல்லற்பட்ட தமிழினத்தின் அவலங்களைப் போக்கி அவர்களுக்காக ஆணித்தரமாகக் குரல் கொடுத்த ஆண்மகனின் குரல்வளை நசுக்கப்பட்டது. தமிழர்கள் ஒரு தலைவனை இழந்தனர்.

தமிழர்களுக்காக தன்னையே தியாகம் பண்ணி இந்தத் தரணியிலே அமரர் குமார் பொன்னம்பலம் செய்த தொண்டுகளெல்லாம் தமிழர் தம் சரித்திரத்தில் நிலைத்திருக்கும். மறைந்தும் மறையாத அமரர் புகழ் நீடு வாழி.

அவரது 9 ஆவது சிரார்த்த தினமாகிய இன்றைய நாளில் அவனியிலே தமிழர்களுக்கு இனிமேலாவது ஓர் ஆறுதல் கிட்ட வேண்டும். அதற்கு அமரர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மா ஆசி வழங்கட்டும்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை