ஊற்று

காணொளி: ஜனவரி 17ஆம் திகதி எம்.ஜி.ஆரின். 92 ஆவது பிறந்ததினம்

"புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர் போராட்டத்துக்கு மிகுந்த ஆதரவை வழங்கியதோடு அல்லாமல் அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் குறியீடாகத் தமிழகம் இருப்பதை உணர்ந்து செயல்பட்டால், இதற்கு உள்நோக்கங்கள் வேறு இருக்கலாம். அது வேறு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டுமென்ற ஆர்வத்துக்கு ஆதரவாகவும் இருந்துள்ளார்" - இவ்வாறு தெரிவித்திருப்பது, தமிழக இணைய சஞ்சிகை ஆறாம் திணை.

["நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி"]

அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வழர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதையம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வழர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே - - கண்ணதாசன்

அவதார புருஷர் எம்.ஜி.ஆர் நினைவாக ஆறாம் திணையில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்:

MGRP1985.jpgமிழக அரசியல் வரலாறும் தமிழ் சினிமா வரலாறும் ஒன்றை ஒன்றை சார்ந்து பின்னிப் பிணைந்து செல்லும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். தமிழர் வாழ்வியலி இன்றியமையா வெளிப்பாடாகத் தமிழ் சினிமா மாறிவிட்டது. ஒருபுறம் தமிழ் சினிமாவில் 'நல்ல தரமான' படங்கள் இல்லையே என வருந்தும் போக்கும், இன்னொருபுறம் வெகுசனத் தொடர்பு சாதனம் எனும் வகையில் குறிப்பாக அரசியல் தொடர்புச் சாதனம் எனும் வகையில் தமிழ் சினிமாவின் சாதனை உலகிலேயே மிக முக்கியமானது.

தமிழ்ச் சமூகத்தில் சினிமா என்னும் தொடர்புச் சாதனத்தின் வன்மைப்பாட்டினைத் தமிழக வரலாற்றில் அது தொழிற்பட்ட முறைமை கொண்டு புரிந்து கொள்ளலாம். அதாவது தமிழக வரலாற்றில் 1967 லிருந்து இன்றுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்துள்ளவர்கள் தமிழ் சினிமாவோடு தொடர்புடையவர்கள். குறிப்பாக, அவர்களது சினிமாத் தொடர்புக்கும் அவர்கள் முதலமைச்சர்களானதற்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. தமிழகத்தின் இதுகாறுமான வரலாறு இதனை நிரூபிக்கிறது.

சினிமாவின் வல்லமையை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் முன்னணியிலிருந்து செயல்பட்டார்கள். தமிழ் சினிமாவை தமிழக அரசியல் வரலாற்றோடு இணைத்து வளர்த்துச் சென்றனர். இக் காலத்தில் அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களின் வருகை பின்னர் வரும் வரலாற்று இயக்கப் போக்கின் திசைப்போக்கை நிர்ணயித்தன. இது பெரிய கலைஞர் பட்டாளம் ஒன்றை அரசியலில் உள் நுழையவும் வழியமைத்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.ராமசாமி போன்றவர்கள் எல்லாம் இப் பின்புலத்தின் பலத்திலேயே செல்வாக்கு மிக்க நபர்களாகக் கலைத்துறையிலும், அரசியலிலும் பிரகாசிக்க முடிந்தது.

தமிழகத்தில் இதுவரை அரசியல் தலைவர்களாக முதலமைச்சர்களாக வந்த அண்ணாதுரை, கருணாநிதி இவர்களை அடுத்துத் தமிழக அரசியலில் மிகுந்த வெகு ஜனக் கவர்ச்சியுடன் அரசியல் தலைவராகப் பரிணமித்தவர் எம்.ஜி.ஆர். 1936 -ல் 'சதிலீலாவதி' எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி சிறு சிறு வேடங்களில் நடித்து 'ராஜகுமாரி'யில் கதாநாயகனாகி 'மந்திரகுமாரி' யால் பெரும் புகழ் பெற்றார். இதன் பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். தனித்த புகழுக்கும் அந்தஸ்துக்கும் உரியவராக மாற்றப்பட்டார் ; மாறினார்.

1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டு வளர்ச்சியடையும் காலத்தில் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வளர்ச்சியும் அதனுடன் இணைக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்னர், கிராமங்களில் மின்சார வசதி பெருகி சினிமா பிரவேசிக்கத் தொடங்கியபோது தாங்கள் கர்ண பரம்பரையாகக் கேட்டு வந்த ராமன் அர்ச்சுனன், ஆகியோருக்கு இணையான மாவீரராகவும் ஏழை மக்களின் நண்பராகவும் எம்.ஜி.ஆரைத் திரையில் கண்டு கிராம மக்கள் துள்ளிக் குதித்தார்கள். மெய்சிலிர்த்தார்கள்.

கிராமப்புற ஏழை மக்கள், நகர்ப்புற வறிய மக்கள் தொழிலாளர்கள் மத்தியில் மனம் கவர்ந்த நாயகனாக எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இதனால் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் மரணமடைவதாகக் காட்டப்படுவதைக் கூட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எம்.ஜி.ஆரின் பாத்திரங்கள் மிகக் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மக்களின் ஏகோபித்த கதாநாயகனாக தலைவராக உச்சியில் நிறுத்தப்பட்டார். எம்.ஜி ஆருக்கென்று ரசிகர் பெருங்கூட்டம் உறுதியாகி வளர்ந்து வர, 'அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்' நிறுவப்பட்டது. குக்கிராமங்கள் எங்கும் பரவி தமிழகத்தையும் கடந்து, அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் எம்.ஜி.ஆர் எனும் நாமம் ஈர்த்தது. ஈர்க்கப் பண்ணியது.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலகி அ.தி.மு.க. எனும் புதிய கட்சியை உருவாக்கி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகப் பரிணமித்தார். 1977 ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றார்.

தமிழகத்தின் முதன்மை அரசியல் சக்தியாக தலைவராக முதலமைச்சராக என பல நிலைகளில் வளர்ந்து செல்லும் போக்கு உருவாயிற்று. இது 1987 டிசம்பர் 24 வரை நீடித்தது. அவரது இறப்புக்குப் பின்னரும் எம்.ஜி.ஆர். தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார். அவ்வளவுக்கு எம்.ஜி.ஆர். புகழ் ஓர் ஈர்ப்பு சக்தியாக மாற்றப்பட்டுள்ளது. மாறியுள்ளது.

சினிமா ஊடகத்தின் ஒர் தன்னிகரற்ற நபராக வெகு மக்களின் ஏகோபித்த தலைவராக வளர்ந்த எம்.ஜி.ஆர் தமிழக அரசியலின் தவிர்க்கப்பட முடியாத மிகப் பெரும் சக்தியாக மாறினார். எம்.ஜி.ஆர். கால ஆட்சி தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தகைய மாற்றங்களை வளர்ச்சிகளை சிக்கல்களை பிரச்சினைகளைக் கொண்டமைந்தன என்பது குறித்து விரிவாக ஆராய வேண்டிய காலகட்டத்தை நெருங்கி விட்டோம். இது தவிர்க்க முடியாமல் திராவிட இயக்கக் கருத்து நிலையின் சிதைவாக்கமும் காலத் தேவை கருதி அது மாற்றமுறும் போக்குகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் திராவிடக் கருத்துநிலை அதன் இயக்கச் செயல்பாட்டின் பொருத்தப்பாடு குறித்த மீள் நோக்கினையும், பார்வையையும் வலியுறுத்தும் காலமாகிவிட்டது.

ஆகவே, எம்.ஜி.ஆர். வெறும் நபர் மட்டுமல்ல. ஓர் குறித்த காலத்தின் அரசியல் குறியீடு. வெகுசன ஊடகம் கட்டமைத்த 'அவதார புருஷர்' , 'ஏழைப்பங்காளர்' , 'நல்லவர் வல்லவர்'. இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்பது குறித்து ஆராயப் புகும் பொழுது சுவாரசியமான பல்வேறு ஆய்வுகளை நோக்கி நம்மைத் திசை திருப்பும்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தைப் பல்வேறு நோக்கு ரீதியில் விமரிசனம் செய்ய முடியும். அதற்கான முழுச் சாத்தியங்களும் உண்டு. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலமும் சரி எவருடைய ஆட்சிக் காலமும் சரி 'தேனும் பாலும்' ஓடிய ஆட்சிக் காலங்கள் அல்ல. ஆனால், அவரவர் தம் பங்குக்குச் சில நல்ல காரியங்கள் செய்துதான் உள்ளனர். இதுதான் பின்வரும் காலத்தில் அவர்களை நினைவுபடுத்துகிறது.

எம்.ஜி.ஆர். காலத்திலும் அதற்கான வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான நோக்கில் பார்க்கும் பொழுது இவை நிச்சயம் மதிப்புப் பெறக் கூடியவையே.

* எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரச ஆணையைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார்.
* சத்துணவுத் திட்டம்
* உயர்கல்வி வளர்ச்சி குறிப்பாக பல்கலைக் கழகங்கள் பல உருவாக்கப்பட்டவை.
* ஈழத் தமிழர் போராட்ட எழுச்சிக்குத் தமிழக ஆதரவை வழங்க முன்னின்றமை.

இவை யாவும் எம்.ஜி.ஆர் வரலாற்றில் தேடிப் பார்த்த உருப்படியான வேலைகள். இவை வரலாற்றில் கவனிப்புப் பெறக் கூடியவை.

எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனையைப் பெரியார் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மாநாடுகளிலும் விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அமுல்படுத்துவதில் பல்வேறு தடைகள் இருந்துகொண்டேயிருந்தது.

எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக்காலத்தில் எழுத்துச் சீர்திருத்தம் அமுல்படுத்துவதற்கான அரச ஆணையைப் பிறப்பித்து நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டார். அப்போது 'முரசொலி' நாளேடு எழுத்துச் சீர்திருத்தத்தைப் பின்பற்றத் தயங்கியது. ஆனால், 'தினமணி' நாளிதழ் சீர்திருத்தத்தைத் தயங்காமல் பின்பற்றத் தொடங்கியது. பின்னர், அதுவே பொது வழக்கமாக மாற்றம் பெறத் தொடங்கியது.

இன்று கணனித் தேவைகளுக்கு ஏற்ப தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு சாதகச்சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், எம்.ஜி.ஆரின். முயற்சியினால் தான் அது சாத்தியப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டம் அமுல்படுத்தலினால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பலர் நன்மை பெற்றனர். இது பல்வேறு ஊழல்களுக்கு வழியமைத்தது என்பது வேறு. ஆனால், இத் திட்டம் கிராமப்புறங்களில் பலத்த வரவேற்பைப் பெற்ற திட்டம். யுனிசெஃப் போன்ற நிறுவனங்களே இத் திட்டத்தை வரவேற்றன. இந்திய அளவிலும் இத் திட்டத்துக்கு வரவேற்பிருந்தது.

உயர்கல்வி பல்கலைக் கழகங்கள் உருவாக்கம் வளர்ச்சியில் அதிகம் அக்கறை செலுத்தியுள்ளார். இவரது காலத்தில் அண்ணா, அன்னை தெரசா, பாரதியார், பாரதிதாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், அழகப்பா, மருத்துவப் பல்கலைக் கழகம் (எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) என பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இவை உயர் கல்வி வளர்ச்சியில் பெரும் தாக்கம் செலுத்துவதற்குச் சவாலாக அமையும். ஆனால், இவை அதனைச் சாதித்துள்ளனவா என்பது வேறு விஷயம்.

அடுத்து, ஈழத் தமிழர் போராட்டத்துக்கு மிகுந்த ஆதரவை வழங்கியதோடு அல்லாமல் அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் குறியீடாகத் தமிழகம் இருப்பதை உணர்ந்து செயல்பட்டால், இதற்கு உள்நோக்கங்கள் வேறு இருக்கலாம். அது வேறு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டுமென்ற ஆர்வத்துக்கு ஆதரவாகவும் இருந்துள்ளார். இலங்கை - இந்தியா ஒப்பந்தம் சாத்தியப்படுவதற்கும் காரணமாகயிருந்துள்ளார்.

இவற்றின் மூலம் தமிழக வரலாற்றில் தமிழர் மத்தியில் எம்.ஜி.ஆர். நினைக்கப்படும் மனிதராகவே இருக்கின்றார்.

நிலவும் நடப்புச் சமூக அரசியல் வரலாற்று நிலைக்குள்ளிருந்து நாம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆர். குறித்த மேலோட்டமான பார்வை இது. இன்னும் பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து பன்முக ரீதியில் அறிவியல் நிலைப்பட்ட ஆய்வு நோக்கில் பார்க்கும் பொழுது தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல், உளவியல் வெகுசன ஊடகம் என பரந்து விரிந்த தளத்தை நோக்கி ஆய்வு விரியும்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை