இலங்கை தமிழர் ஆதரவு மனிதச் சங்கிலி காணொளியில், கலைஞர் ரி.வி இல் இருந்து
" மனிதச் சங்கிலிக்கு மேலும் பெருமை சேர்த்தது மழை தான்; அதனால் "மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்'' என்போம். 21-ந் தேதி மனித சங்கிலி நடத்துவதாக இருந்து பெரு மழை காரணமாக அதனை ஒத்திவைக்க நேர்ந்தபோது, 24-ந் தேதியும் மழை பெய்தால் என்ன செய்வது, தீபாவளி நெருங்கிவிடுமே என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. அதைப் போலவே 24-ந் தேதி சரியாக 3 மணிக்கு பெருமழை நகரெங்கும் கொட்டியது.
எனினும், அந்தக் கொட்டும் மழையிலும் தமிழர்கள் கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து -அனைத்துத் தரப்பினர், அனைத்துக் கட்சியினர், வழக்கறிஞர்கள், மாணவ-மாணவிகள், கலை உலகத்தினர் என தமிழர்களின் உணர்வு பட்டுப்போய் விடவில்லை என்பதை மெய்ப்பிக்கின்ற வகையிலே மனிதச் சங்கிலி வெற்றி கண்டுள்ளது. அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் " - முதல்வர் கருணாநிதி


Comments
Our sincere thanks to the Chief Minister Hon. Kalaignar Karunanithi and all those who have participated in this human chain protest against SriLanka.
We hope Kalagnar would take further steps to protect the Tamils in Sri Lanka, against Sri lankan govt. genocide
Posted by: Rajah Manoharan | October 26, 2008 06:27 PM