இலங்கைத் தமிழருக்க்காக அறவழிச் செயல் முறைகளில் நாம் ஈடுபட வேண்டும்
இலங்கைத் தமிழருக்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும், அமைதியின் சுகந்தம் நிறைந்திடவும் அறவழிச் செயல் முறைகளில் நாம் ஈடுபட வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[அண்ணா சாலையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பில் கொட்டும் மழையில் நிற்கும் கல்லூரி மாணவிகள்-படம்: தினமணி]
இதுதொடர்பாக அவர் அக் 24ம் திகதி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்ப தற்கு ஒரு வாரம் முன்னதாகவே மயிலை மாங்கொல்லையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
அந்த சமயத்தில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இலங் கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலி யுறுத்தினேன். அக்டோபர் 6-ம் தேதி மாலையில் இந்திய பாதுகாப்பு ஆலோ சகரை அழைத்து, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரச் சொல்லி எச் சரிக்கச் செய்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த 14-ம் தேதி மாலை தில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோ கன், இலங்கை நிலவரம் பற்றி கவலை தெரிவித்தார்.
16-ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளி யிட்ட அறிக்கையிலும், இலங்கை அர சின் செயல்பாடு பற்றி கவலை தெரிவித் துள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் அனுப்பிய தீர்மானங்களை நன்றா கப் பரிசீலித்து அதனை ஏற்கும் வகை யிலே மத்திய அரசு செயல்படும் என்ற நம்பிக்கை மேலும் கூடுகிறது.
கடந்த 18-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர், அப்பாவித் தமிழர் தாக்கப்படுவது பற்றி கவலை தெரிவித் ததாக செய்திகள் வந்துள்ளன. இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருள் கள் தடையின்றி வழங்க வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதி ரான போரில் தமிழரின் உரிமையும் நலன்களும் பாதிக்கப்படக் கூடாதென் றும் பிரதமர் தெரிவித்ததாகவும் செய்தி கள் கூறுகின்றன
மேலும், இலங்கையில் உள்ள நிலையை அறிய பிரணாப் முகர்ஜியை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.
கடந்த 16-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மூலம் அனுப்பிய 750 டன் உண வுப் பொருள்கள் இலங்கையின் வடக் குப் பகுதியில் விநியோகிக்க மறுக்கப் பட்ட நிலையில், பிரதமர் பேசியதன் விளைவாக, அதே நாளில் 2.30 லட்சம் பேருக்கு அவை விநியோகம் செய்யப் பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்திய அரசின் கண்டனத்தை உடனடியாக இலங்கைக்குத் தெரிவிக்குமாறும் கேட் டுக் கொண்டார்.
பிரணாப் முகர்ஜி 22-ம் தேதி நாடா ளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை யில், தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் நல்வாழ்க்கையும் பாதிக் கப்படக்கூடாது எனக் கூறியுள்ளார்
இவ்வாறு மத்திய அரசின் செயல்கள், நமது வேண்டுகோளை நிறைவேற் றும் வகையிலும், இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுகிற வகையிலும் அமைந்துள்ளதை அறிய முடிகிறது.
ஆனாலும் இதுவே நமக்கு முழு மன நிறைவைத் தரக் கூடிய விளைவாகும் என எண்ண முடியவில்லை. தரப்படும் உறுதிமொழிகள் தவறாமல் நிறைவேற்றப்படவும், இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரகுடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும்.
இப்போது படிப்படியாக நிறைவேறி வரும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு, முழுமையாக நிறைவேறிட வும் இலங்கைத் தமிழருக்கு நிரந்தர இன்பம் வாய்த்திடவும், அமைதியின் சுகந்தம் நிறைந்திடவும் அறவழிச் செயல் முறைகளில் நாம் ஈடுபட வேண்டும்.
அதற்கான உந்து சக்திகளில் ஒன்று தான் மனிதச் சங்கிலி முயற்சி. அதிலே இணைந்திட்ட நாம், இலங்கைத் தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம் என கருணாநிதி கூறியுள்ளார்.

