ஊற்று

'தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள்'

மிழகத்தில் பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று (BJP) பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அக். 23, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரிவினைவாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள். தமிழகத்தில் பெரும்பாலான மக் கள் இலங்கையில் பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

[(BJP) பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன்]

இதை பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களும், தனித் தமிழ் நாடு கோரிக்கை வைப்பவர்க ளும் லாபம் அடைய முயற் சிப்பதை அறிந்து தமிழக மக்கள் இப் பிரச்னையிலிருந்து விலகுவார்கள். இதனால் இலங்கைத் தமிழர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண் டுள்ளேன். தமிழகத்தில் நீதிக் கட்சி தோன்றி அதிலிருந்து வேறு சில கட்சிகளும் தோன் றிய பிறகு தமிழகத்தில் பிரிவினை கோஷம் எழுந்தது நாத்திகம், பிரிவினைவாதம் என்ற இரண்டு தூண்களின் ஆதாரத்தில் திமுக வளர்ந் தது. ஆனால் 1967 தேர்தலில் இந்த இரண்டு விஷயங்களை யும் திமுக எழுப்பவேயில்லை.

ஆட்சிக்கு வந்த பிறகு திமுக பிரிவினைவாதத்தை பகிரங்கமாக கைவிட்டது.
தோற்றுப்போன பிரிவினைவாதத்தை இன்று தமிழக மக்கள் மத்தியில் மீண்டும் கிளப்ப சிலர் முயற்சி செய்கிறார்கள்.

அவர்களின் முயற்சி வெற்றி பெற போவதில்லை.

தமிழக அரசு இத்தகையப் பேச்சுகளை அலட்சியம் செய் யாமல் உறுதியான நடவ டிக்கை எடுக்கவேண்டும்.

ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை வழங்கப்பட்ட நளினியை, பிரியங்கா சந்தித்த பிறகு விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது.

இலங்கை தமிழர்கள் இன்னலின்றி வாழவும், சம உரிமை பெறவும் தேவையான வற்றை செய்யுமாறு இலங்கை அரசை இந்திய அரசு வற்பு றுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்று இல. கணேசன் குறிப் பிட்டுள்ளார்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை