ஊற்று

எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார் கனிமொழி

முதல் அமைச்சர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபை தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தனது எம்.பி. பதவிக்கான ராஜினாமா கடிதத்தை முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

[கனிமொழி]

இராஜினாமா தொடர்பாக தமிழ் நாட்டில் இருந்து வெளி வரும் தினமணி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை திமுக தலைவரும், முதல்வருமான கருணாநி தியிடம் அக். 15, புதன்கிழமை அளித்தார் கனிமொழி.

பின் தேதியிட்டு இந்த ராஜிநாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ராஜிநாமா கடிதத்தை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து திமுக தலைமையிடம் எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.

இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்வார்கள்' என்று அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மாநிலங்க ளவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை கனிமொழி புதன்கி ழமை அளித்தார். தமது தந் தையும், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியி டம் இந்தக் கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

இதற்காக, முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்கு புதன்கிழமை காலை அவர் வந்தார். ராஜிநாமா கடிதத்தை நேரில் அளித்தார்.

இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசுக்கு 2 வாரம் காலக்கெடு அளித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு நாளே தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜி நாமா செய்வதற்கான கடிதத்தை கனிமொழி அளித்துள்ளார்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை