கருணா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தொலைபேசியூடாக வழங்கிய செவ்வி
"ஜனாதிபதியிடம் எதனையும் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம்"
ஜனாதிபதியின் சகோதரர்களுடனும் நட்பு ரீதியான வலுவான உறவுள்ளது. இந்த நட்பினையும் எமது கிழக்கு அபிவிருத்திக்கான வாய்ப்புக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி.எம்.வி.பி.) அமைப்பின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கொழும்பில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் நாளிதளான வீரகேசரியின் வாரவெளியீட்டுக்கு தொலைபேசியூடாக வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

[எம்.பி யாக சத்தியப்பிரமாணம் செய்த பிற்பாடு, ஜனாதிபதியுடன் கருணா]
திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்காக ஐயாயிரத்துக் கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூலைக்கலவரம் உருவாகியது. சிங்கள மக்களிடம் அவ்வேளையில் இருந்த மனோ நிலையை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தின் கொண்டனர். அதே நேரத்தில் அனுராதபுரத்தில் தற்போது இருபத்தெட்டுப்பேர் கொல்லபட்டனர். எதுவும் நடைபெறவில்லை.
சிங்கள மக்கள் அன்றிருந்த மனோநிலை வேறு இன்றுள்ள மனோநிலை வேறு. என்று குறிப்பிட்ட அவர் அரசியலில் முஸ்லிம் களைப்பின்பற்றிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் அபிவிருத்தியை நோக்கியே செயற்பட்டார்கள். அவர்கள் ஏமாற்றப்படவும் இல்லை. ஏமாற்றப்பட் டதாகவும் சொல்லவுமில்லை. அவர்கள் பயப்படவும் இல்லை. சிறுபான்மை இனக் கட்சிகள் அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான், அஷ்ரப் போன்றவர்களின் அரசியல் இவ்வாறே அமைந்திருந்ததாகவும் கருணா செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கருணா வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் முழுவிபரம் வருமாறு:
கே. மாகாண சபையின் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யமுடியுமா? ஏனைய மாகாண சபைகளில் உள்ளோர் அதிகாரங்கள் போதாது எனக் கூறிவருகையில் அரசாங்கம் அதிகாரப்பரவலõக்கத்திற்குத் தயாராக உள்ளதா?.
ப. இதிலொரு சிறப்பியல்புள்ளது. ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரையில் அதிகாரங்கள் போதாது. ஆனால் எமது பிரதேசம் அவ்வாறல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் அதிகமான அரசார்பற்ற நிறுவங்களின் வளங்கள் ஒதுக்கப்படுகிறது. மற்றையவைகளுக்கு இந்த வளம் இல்லை. இது ஏனைய மாகாணங்களுக்குப் பிரச்சினையாக இருக்கும். ஆனால் எமது பிர ÷தசத்தினை சர்வதேசங்களின் உதவிகளுடன் அபிவிருத்தி செய்யமுடியும்.
அதே நேரத்தில் காலப்போக்கில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து நிதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அது சம்பந்தமாக ஜனாதிபதியிடம் பேசியுள்ளேன். அதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கே. என்ன அடிப்படையில் அல்லது உடன் ல் பாட்டில் அரச தரப்பு எம்.பி.யாக இணைந்துள்ளீர்கள்.?
ப. எங்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் எந்த விதமான உடன்பாடும் இல்லை. ரி.எம்.வி.பி. கட்சி என்பது ஏற்கனவே அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துதான் இயங்கும் என கூறியிருக்கிறோம். அதற்கமைய இணைந்துள்ளோம். ஒரு சிறுபான்மைக்கட்சி என்ற வகையில் மத்திய அரசில் ஆளும் தரப்புடன் இணைந்து இயங்க வேண்டும் என்பது எமது கொள்கையும் கூட. அப்போதுதான் அதிகமான அபிவிருத்திகளைச் செய்யக் கூடியதாக இருக்கும். இதில் தொண்டமான் மற்றும் அஷ்ரப் ஆகியோரை நாம் பார்க்கலாம். அவர்கள் இவ்வாறானதாகவே செயற்பட்டு வந்தனர்.
நாம் இழந்த 22 வருட இடைவெளியை நிரப்ப வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எமக்கிருந்தாலும் அபிவிருத்தி செய்யக்கூடியதாகவோ அல்லது தேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவோ இருக்கவில்லை. அதனை குறை நிரப்புச் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
வாய்ப்பேச்சு அரசியல் இப்போது செயற்பாட் டிற்குப் பொருந்தாது. அதனால் செயற்பாட்டு அரசியலை நடத்துவதற்காகவே மத்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குதல் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளோம். தமிழ் எம்.பி.க்கள் 22பேர் இருந்தும் எமது பிரதேசங்களை சரியாக அபிவிருத்தி செய்ய முடிய வில்லை. அதனைக் கேட்பாரும் இல்லை, பார்ப்பாரும் இல்லை. அதற்காக அவர்களை நாம் குற்றம் சொல்லவும் முடியாது.
அவர்கள் சரியான முறையில் செயற்பட்டிருந்தால் எவ்வளவோ விடயங்களைப் பெற்றுக் கொண்டி ருக்க முடியும்.
கே. கிழக்கு மாகாணம் ஏற்கனவே பின்தங்கிய மாகாணமாக உள்ளது. போர் காரணமாக மேலும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு எத்தகைய திட்டங்களை அரசு முன்வைத்துள்ளது.
அதற்கான நிதி நிலைமை எவ்வாறுள்ளது.?
ப. அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட கிழக்கின் அபிவிருத்தி குறித்து முக்கியப்படுத்தி பேசியிருக்கிறோம். மீட்கப்பட்ட பிரதேசத்தை ஒரு முன்மாதிரியாகச் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. தமிழ் மக்க ளுக்கு அரசின் செயற்பாட்டை திறம்பட தெளிவுபடுத்த வேண்டியும் உள்ளது. அதனை ஜனாதிபதி உணர்ந்திருக்கிறார். இதில் ஒரு விடயம் உள்ளது. 22 வருட காலமாக யுத்தம் நடை பெற்ற பிரதேசம் ஓரளவுக்கு மீட்கப்பட்டு தேர்தல் நடைபெற்று ஐந்து அல்லது ஆறு மாதங்களில் பெரிய மாற்றங்கள் வரும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் அதற் கான அத்திவாரங்கள் போடப்பட்டு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டே வருகிறது. உதாரணத் திற்கு வாகரையில் மீன்பிடி அபிவி ருத்தி நல்லமுறையில் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தான் கட்டம் கட்டமாக அவை ஏற்படும்.
ஆனால் அதற்கான அழுத்தங்கள் உள்ளன.
நாங்களும் அழுத்தம் கொடுக்கவுள்ளோம்.
உரிமையுடன் ஜனாதிபதியிடம் கேட்டுப் பெறவேண்டிய தேவை உள்ளது. அந்த அள விற்கு நெருக்கமும் உள்ளது.
கே: அந்தவகையில் அரசாங்கம் கிழக்கை அபிவிருத்தி செய்யும் என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளதா?
ப. நிச்சயமாக எமக்கு நம்பிக்கையுள்ளது.
அபிவிருத்திக்கு எமக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும்.
கே. கிழக்கு முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மீன்பிடித்தடை எதற்காக? தேடுதல்கள் எதற்காக.?
ப. மீன்பிடித்தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அண்மையில் கூட 15க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வந்துள்ளன. அவை வருவது பிரச்சினையல்ல தடைகளை நீக்குவதில்தான் பிரச்சினையிருக்கிறது. இப்போது மீன்பிடிப்பதற்கான அனுமதி இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஏற்கனவே ஓட்டமாவடி வாழைச்சேனை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய பகுதிகளில் ஓரளவுக்கு அவற்றை நீக்கிக் கொண்டு போகலாம். மற்றையது கிழக்கு கட்டுப்பாட்டிலுள்ளது என்றில்லை. அத்துடன் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பிரச்சி னைகளில்லையென்று இல்லை. வடக்குப்பிர தேசம் இழந்து கொண்டு வருகையில் எல்லா இடங்களிலும் தாக்குதல்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவற்றினைக் கட்டுப் படுத்தவதற்கு தேடுதல்கள் நடைபெறுகின் றன. இது ஒரு பிரச்சினையாக இருந்தது.
மட்டக்களப்பின் புத்திஜீவிகளை அழைத்து ஜனாதிபதியுடன் இது குறித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன். அவர்கள் ஜனாதிபதியுடன் உரிமையுடன் பேசினார்கள்.
அவரும் அதற்குரிய விளக்கங்களை கொடுத்தார். உரிமையுடன் கேட்டு பேசிக் கொண்டார்கள். இவ்வாறான விடயங்கள் விளக்கங்களுடன் உரிமைகளுடன் இருந்தால் காலப்போக்கில் பிரச்சினைகள் இல்லாமல் போகும்.
கே. நீங்கள் விரைவில் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அப்படியானால் எந்த அமைச்சைப் ந் பொறுப்பேற்கவுள்ளீர்கள்.?
ப. நாங்கள் அமைச்சுப்பதவி பற்றி இதுவரை பேசவில்லை. எங்களது மக்களைப் பொறுத்தவரை அபிவிருத்தி பற்றியே எங்களது மக்களும் எதிர்பார்க்கிறார்கள். காலப்போக்கில் அமைச்சுப்பதவி பற்றிப் பேசுவதற்கான வாய்ப்புள்ளது.
கே: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மையில் சந்தித்தீர்கள். இச்சந்திப்பு புதிய அரசியல் கூட்டணி உருவாகவுள்ளதாக பேசப்படுகிறதே.?
ப. கூட்டணி சம்பந்தமாகப் பேசவில்லை.
இது ஒரு நட்பு ரீதியான சந்திப்பாகவே அமைந்திருந்தது. எங்களது நெருக்கங்களை அதிக?த்துக் கொள்ளவே இச்சந்திப்பு நடைபெற்றது. காலப்போக்கில் ஒரு கூட்டு அரசியல் கட்சியாக கூட்டுச் சேர்ந்து இயங்குவது பற்றி அவசரமாக முடிவெடுக்க முடியாது.
அதனை முடிவு செய்வதானால் மத்திய குழு, உயர் பீடம் பழைய உறுப்பினர்களுடன் கலந் தாலோசித்தே மேற்கொள்ளமுடியும். ஆனால் எல்லா அரசியல் கட்சிகளுடனும் நட்பு நல்லுறவைப் பேணுவதற்கு எதிர்பார்க்கிறோம்.
கே. உங்களது எதிர்கால அரசியல் செயற்பாடு எவ்வாறு அமையும்?
ப. இது குறித்து நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். இரண்டு விடயங்களுக்காகவே பாராளுமன்ற உறுப்பினராக இணைந்துள்ளேன். ஒன்று எமது மக்களுக்கான அபிவிருத்திக்கு?ய களமாக பாராளுமன்றத்தினைப் பயன்படுத்த வேண்டும். அத்துடன சர்வதேசங்களுடன் நல்லமுறையில் இணைந்து அபிவிருதிக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்?. இரண்டாவது எமது கட்சியை மீளமைப்புக்குட்படுத்தி அதன் செயற்பாட்டை பரவலாக்குவதற்கு?ய களமாகவும் பயன்படுத்தும் நோக்கம் உள்ளது.
கே.சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றுதான் நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தீர்கள் கிழக்கு மக்க ளுக்கு இவர்கள் ?லம் ஏதாவது செய்ய முடியும் என்று இன்று நம்புகிறீர்களா?
ப. கடந்தகாலத்தின் தவறுகளாலேயே இந்த யுத்தம் இவ்வாறு பூதாகரமாக வெடித்தது என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களுடைய சுய லாபங்களுக்காக இனவாதத்தைத் வளர்த்தார்கள். இதற்குச் சின்னதொரு உதாரணம். திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்காகத்தான் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஜூலைக் கலவரம் என்ற ஒன்று உருவானது. அந்த நேரத்தில் சிங்கள மக்களிடம் இருந்த மனோநிலைகளை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தினார்கள்.
அதே நேரத்தில் அனுராதபுரத்தில் ஜானக பெரேராவின் மீதான தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எதுவித உணர்ச்சிவசப்பாடுகளும் இடம்பெறவில்லை.
அன்றைக்கு அந்த மக்களுக்கிருந்த மனோநிலை வேறு இப்போதுள்ள மனோநிலை வேறு. இப்போது சிங்கள மக்கள் தமது இதயத்திலிருந்தே தமிழர்களுக்கு சகல உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். எல்லா இடங்களும் சமத்துவமாக இருக்க வேண்டும். என்றும் விரும்புகிறார்கள். ஆனால் தனிநாடு என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
அதே நேரத்தில் இப்போதைய அரசாங்கமும் முற்போக்கான சிந்தனையுடன் உள்ளது. இது நமக்கொரு வாய்ப்பாக இருக்கும். அதே நேரத்தில் எமக்கு ஜனாதிபதியின் சகோதரர்களுடனும் நட்பு ரீதியான வலுவான உறவுள்ளது. அதனையும் எமது அபிவிருத்திகளுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் 22வருடகாலமாக சிதைந்து அழிந்துபோயுள்ள பொருளாதாரக்கட்டமைப்புகள், கல்வி, கலை கலாசாரம் மற்றும் சமூகக் கட்டுமானங்கள் அடங்கலான அனைத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். அகதிவாழ்க்கை, இடம்பெயர்வுகள் போன்றவற்றால் சிதைந்து போயுள்ள எமது பிரதேசத்தின் அனைத்து விடயங்களையும் கட்டியெழுப்பிய பின்னரே மாகாண சபையின் பொலிஸ் அதிகாரமோ ஏனையவைகளõகவோ பேச இருக்கும்.
மீண்டும் மீண்டும் தேவையற்றவைகளைக் கேட்டு பிரச்சினைகளை வளர்ப்பது அவ்வளவுக்கு நல்லதல்ல. தென்பகுதிகளில் உள்ள மக்கள், மற்றும் அரசியல்வாதிகளின் மனங்கøளயும் வென்று கொண்டு நமது தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கு வீணான விதண்டாவாதமான கோரிக்கைகளை விடுப்பது நல்லதல்ல.
கே. கடந்த காலங்களில் தமிழ் தலைமைத்துவங்கள் சிங்களத் தலைமைத்துவங்களால் ஏமாற்றப்பட்ட வரலாறே உள்ளது. இந்நிலையில் நீங்கள் இப்போது வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைய அரசியல் தலைவர்கள் செயற்படுவார்களா?
ப. நிச்சயமாக ஒரு மாறுதல் இருக்கிறது. அரசிலும் அரசியல் தலைவர்களிட?ம் தென்பகுதி மக்களிடமும் உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்ற மன மாறுதல் இருக்கிறது.
பொதுவாக உரிமைகள் என்பதற்குள் மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
கே. கடந்த காலங்கள் போல் நீங்கள் ஏமாற்றப்பட்டால் உங்களது அடுத்த நடவடிக்கை என்ன.?
ப. எதையும் அரசியல் ரீதியாகக் குரல் கொடுத்துப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். இதில் முஸ்லிம்களைப் பின்பற்றிப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் இந்த 22 வருடகாலத்தில் கட்சி வேறாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி அவர்களது அபிவிருத்தியை நோக்கியே செயற்பட்டனர். அவர்கள் ஏமாற்றப்பட்டதாகச் சொல்லவும் இல்லை. ஏமாற்றப்படவும் இல்லை. அவர்கள் பயப்படவும் இல்லை.
ஏனென்றால் மக்கள் சக்தியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் உள்ளது. அதே போல் நாங்கள். கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் ரி.எம்.வி.பி.யின் கீழ் இருப்பார்களாக இருந்தால் வெற்றிகளைச் சம்பாதிக்கலாம்.
அது தவறுமாக இருந்தால் எதனையுமே பெற்றுக் கொள்ள முடியாத சூழல் உருவாகலாம்.
அதில் மாகாண சபைத் தேர்தலில் திருகோண மலைக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
மாகாண சபை இயங்கினாலும் அந்த மாவட்டத்திற்காக உரிமைக் குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை. அவர்கள் விட்ட தவறு இது.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் விடப்படக் கூடாது. ரி.எம்.வி.பி. கட்சிதான் என்றி ல்லை. எமது கட்சி தவறுவிடலாம். கருணா அம்மான் தலைவராக இருக்கலாம். அல்லது வேறு ஒருவர் தலைவராக இருக்கலாம். ரி.எம். வி.பி. கட்சியைப்பிடிக்காவிட்டால் வேறு ஒரு கட்சி. நாம் ஏதாவது ஒரு கட்சியில் பலமாக இருக்க வேண்டும். ஒருமித்து ஒரே கட்சிக்கே வாக்களித்து நமது பலத்தினை நாம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனையே கிழக்கு மாகாண மக்களிடம் வேண்டு கோளாக விடுக்கிறேன். பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கும் போது வாதிடும் திறனும் இருக்கும் அப்போது வென்று கொண்டே போகலாம்.
கே. சர்வகட்சி மாநாட்டுக் குழுவில் எவ்வாறான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளீர்கள்?
ப. ஒரு மித்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது திட்டமாகும்.
கே.யுத்தத்தினால் கிழக்கில் பெருந்தொகையானோர் விதவைகளாகியுள்ளனர். அவர்களுக்கõன திட்டங்கள் ஏதாவது உள்ளதா? அத்துடன் யுத்தத்தினால் அண்மைக்காலம் வரை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நஸ்ட ஈடுகள் வழங்கப்படவில்லை அதற்கு என்ன செய்யவுள்ளீர்கள்.?
ப. விதவைகள் என்று அவர்களைக் குறிப்பிடுவதை விடவும் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவிகள் என்ற அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேசி தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் பயிற்சிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளேன். அதனூடாக கைத்தொழில் ஊக்குவிப்புகளை மேற்கொண்டு சந்தைப்படுத்தல் வரை செய்து முடிக்க எண்ணியுள்ளேன்.
எதிர்கõலத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நஸ்ட ஈடு விடயத்தில் ஜனாதிபதி மற்றும் ஏனையவர்களுடனும் பேசி அவற்றினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளேன்.
கே. இடம்பெயர்ந்த மக்களது விடயத்தில் உங்களது நிலைப்பாடு என்ன? முக்கியமாக சம்பூர் மக்கள் தங்களது நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது இதற்குப் பரிகாரம் என்ன.?
ப. இடம்பெயர்ந்த மக்கள் கட்டாயமாக குடியமர்த்தப்படவேண்டும் என உறுதியாகக் கேட்டு வருகிறோம். மட்டக்களப்பை பொறுத்தவரை அதிகமானவர்கள் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள். படிப்படியாக குடியமார்த்தப்பட்டு வருகிறார்கள். தொப்பிகல பிரதேசத்தில் குடியமர்த்தல் நடைபெற்று வருகிறது.
சம்பூர் மக்கள் சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோருடன் பேசியுள்ளேன். சம்பூரில் நான்கு கிராம சேவையாளர் பி?வுகளை அனல் மின் நிலையத்திற்காக எடுக்கிறார்கள். அவர்களுக்கு நல்லவிதமான மாற்றீடான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மற்றைய பிரதேசங்களில் மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்ந நடவடிக்கைகளை ஆளுநருடன் பேசிய போது மிக விரைவாக இந்த மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் ஆவன செய்வதாக உறுதியளித்திருக்கிறார். இந்த மக்களின் பிரச்சினைகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கு நானும் தொடர்ந்தும் செயற்படுவேன்.
கே. சர்வதேச மன்னிப்புச் சபை உங்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றம் கொண்டு வர வேண்டும் எனக் கோரியிருக்கிறது. இது குறித்து உங்களது கருத்து என்ன.?
ப. இது தேவையற்ற கோரிக்கையாகும்.
அந்த அமைப்புக்குள் இருக்கும் எங்களுக்கெதிரான அரசியல் தீய சக்திகளின் விளையாட்டாகவே இது இருக்கிறது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் போய் நான் எதுவித குற்றச்சாட்டும் இல்லாது விடுவிக்கப்பட்டு வந்துள்ளேன்.
அப்போது இவர்களது குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஆராய்ந்தவர்கள். இங்கு நடக்கின்ற பிரச்சினைகளுக்கும் எங்களுக்கும் எது வித தொடர்பும் இல்லை. அந்தவகையில் இது சர்வதேச மன்னிப்புச் சபையின் ஒரு தேவையற்ற குற்றச்சாட்டாகும். நாங்கள் யுத்தம் செய்யவும் இல்லை.
நாங்கள் படைக்கு ஆட்கள் சேர்பதும் சிறுவர்களைச் சேர்ப்பது என்று கூறுவது என்பதெல்லாம் தேவையற்ற குற்றச்சாட்டாகும்.

