காணொளி: 'அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்'
ரி.எம். சௌந்தரராஜன் வழங்கும், முருக பக்தி பாடல் - இலங்கையிலிருந்து இயற்கை காட்சிகளை உள்ளடக்கிய படக் கோவையுடன்:
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
முருகனை பணிந்த பின் மனங்களில்
பற்றி படர்வது பலவகை நலங்களே
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
மலை முடி மருவிய முகில்களில்
பயிர் விளைந்திட விழுந்தது மழைத்துளி
அழகனின் திருமிகு அடியிணை
கண்டு அடைந்தவர் அடைவது உயிர்த்துணை
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
குழல்வழி நுழைந்ததும் ஒலிகளின்
பெயர் இசை என விளங்குதல் இயற்கையே
குறுநகை குமரனின் உறவினில்
நம் குலம் வளம் பெறுவதும் இயற்கையே
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
பழம் தரும் பயன்மிகு மரங்களை
சுற்றி பசி மிகும் பறவைகள் பறந்திடும்
அருள் தரும் குறிஞ்சியின் தலைவனை
தொழும் அடியவர் திகழ்வதும் தொடர்ந்திடும்...தொடர்ந்திடும்
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில்
இனி அடுத்தது அழகிய மலர்களே
முருகனை பணிந்த பின் மனங்களில்
பற்றி படர்வது பலவகை நலங்களே...நலங்களே

