ஊற்று

கணேசவாதம்: கடவுள் கணேசனை புகழ்ந்தேத்தும் அற்புத ஓவியத்திருவிழா

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ஓவியர் மஹேன் சண்முகம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் சித்திரக் கலையில் ஆற்றல் மிக்க திறமைகளை வெளிப்படுத்தி போற்றத்தக்கதோர் கலைச் சேவையாற்றி வருகின்றார்.

கடந்த 12 ஆண்டு காலப்பகுதியாக கணேசக் கடவுகளின் உருவ ஓவியங்களை தீட்டி கலைப்பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றார்.

பிள்ளையாரின் அற்புதமான குறியீட்டு தத்துவங்களையும், வரலாற்று அடையாளங்களையும் சமகால வர்ண ஓவியங்களுக்குள் வெளிக்கொணர ஓவியர் மஹேன் சண்முகம் மேற்கொள்ளும் உயிரூட்டமான முயற்சிகள் வியக்கத்தக்கதாகும்.

யானை முகமும், விரைவாகச் செல்லக்கூடிய எலி வாகனமும் மதிநுட்பம், அறிவாற்றல், மற்றும் சமயோசித புத்தி என்பனவற்றை பிரதிபலிக்கின்றன.

மரபுரீதியான சித்திரக் கலைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நவீன ஓவியக் கலை நுட்பங்களை புகுத்தி கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் தனது சித்திரங்களை ஊடறுக்கச் செய்துள்ள மஹேன் அந்தச் சவாலில் வெற்றியும் கண்டுள்ளார்.

இந்து சமய தத்துவார்த்த கோட்பாடுகளையும், சமய ஐதீகங்களையும் அடிப்படையாகக் கொண்டு அவரது தூரிகை வர்ணஜாலங்களை பதிவு செய்துள்ளன. இந்து ஆலய வாயில்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மனதை வருடிச் செல்லக்கூடிய தெய்வீக நிறங்களை அவர் தனது ஓவியங்களில் மிக லாவகமாக பயன்படுத்தியுள்ளார்.

பிரகாசமான இளஞ்சிவப்பு, இளம் பச்சை மற்றும் பல வர்ணங்களைக் கொண்டமைந்த சக்கரங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சின்ன சின்ன கண்ணாடிகளில் கணேசனின் அற்புத உருவம் வெள்ளி நிறத்தில் காண்போரின் மனதை ஈர்க்கும் வகையில் தெய்வாசமாக திகழ்கின்றது.

மஹேனின் அநேகமான படைப்புக்களில் ஒளிர் வர்ணப் பயன்பாடு தனித்துவமான அம்சமாக குறிப்பிடலாம். அவரது படைப்புக்களில் அநேகமானவை சகாவரம் பெற்றதும், அகிலத்துடன் பிணைப்புடையதுமானதாக காணப்படுகின்றது.

ஆத்மார்த்த உணவுர்வுகளை விழிப்படையச் செய்யக்கூடிய ஓர் உன்னதமான வல்லமை அவரது தூரிகையினால் படைக்கப்பட்ட சித்திரங்களுக்கு அமையப் பெற்றுள்ளது.

சித்திரக் கலைஞர்கள் பயன்படுத்தக் கூடிய அனைத்து ஊடகங்களையும் கையாள்வதில் மஹேன் விற்பன்னராக திகழ்கின்றார்.

பின்னர் எண்ணெய் சித்திரங்களை தீட்டுவதனை இடைநிறுத்திக் கொண்டார். தற்போது மரம், துணி, கொங்கிரீட் மற்றும் கற்களைப் பயன்படுத்தி தமது ஓவிய சிருஷ்டிகளை அற்புதமாக படைத்து வருகின்றார்.

மஹேன் சண்முகம் தற்போது தலைநகர் கொழும்பில் வசித்து வருகின்றார்.

2005ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி முதல் ஜூன் மாதம் 1ம் திகதி வரை கொழும்பு ஃபெயர்பூட் அரங்கில் ஓவியக் கலைஞர் மஹேன் சண்முகத்தின் கணேசிசம் (கணேசவாதம்) என்ற ஆன்மீக சித்திரக் கலை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த அரிய ஓவியக் கண்காட்சி பெரும் எண்ணிக்கையிலான சித்திரக் கலை ஆர்வலர்களையும், கணேச பக்தர்களையும் தன்பால் ஈர்த்திருந்தது.

ஓவியக் கலைஞர்களுக்கு பொதுவாகக் காணப்படும் அடிப்படை குணாதிசமாக மாற்றுக்கொள்கையை சந்தேகமின்றி குறிப்பிட முடியும். எனினும் இதனை இங்கு காணக்கூடியதாக இல்லை.

20ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான ஓவிய வரலாற்று ஆசிரியர்களான ருடொல்ப் மற்றும் மார்கொட் விட்கொவர் ஆகியோரின் “போர்ன் அன்டர் சட்ரன்” என்ற நூலில் சித்திரக் கலைஞர்களின் குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும் விபரிக்கப்பட்டுள்ளது.

ஓவியக் கலைஞர்கள் தொடர்பில் தன்னிச்சையான யூகங்களே நிலவிவருகின்றது. குறிப்பாக அவர்கள் சுயநலவாதிகள், எதிர்வுகூற முடியாதவர்கள், பயந்த சுபாவமுடையவர்கள், நேர்மையற்றவர்கள், அதீதநம்பிக்கை கொண்டவர்கள் என ஓவிக் கலைஞர்களின் குணாதிசயங்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்கின்றனர். மொத்தத்தில் சித்திரக் கலைஞர்களுடன் சீவியம் நடத்துவது மிகவும் சவால் மிக்கதென முதன்மையான நூலாசிரியர்கள் 1963ம் ஆண்டில் வெளியான தங்களது நூலில் விபரித்துள்ளனர்.

எனது அறிவுக்கு எட்டிய வகையில் மஹேன் சண்முகம் என்ற சித்திரக் கலைஞருக்கு பிரச்சினைகள் ஏற்பட அவரது மிதமிஞ்சிய எளிமையயே காரணம் எனக் குறிப்பிடத் தோன்றுகின்றது.

மிகவும் அமைதியான முறையிலும் சுயமதிப்பீடற்ற ரீதியிலும் தனது படைப்பாற்றலை கடந்த காலங்களில் அற்புதமாக விருத்தி செய்துள்ளார்.

மக்களுக்கு அவரது குணாதிசயங்களை தெளிவுபடுத்துவதற்கு அவர் தன்னை ஓர் ஓவியக் கலைஞனாக அடையாளம் காணும் விதத்தை குறிப்பிட்டால் போதுமானதாக இருக்கும்.

மஹேன் சண்முகம், மத ரீதியான ஈடுபாட்டின் காரணமாக விநாயகர் உருவங்களை சித்திரமாக தீட்டத்தத் தொடங்கவில்லை. யானையின் சிரசைக் கொண்ட கணேச உருவங்களை ஓவியமாக தீட்டும் பணி ஒர் தனிப்பட்ட ஓவிய பயணமாகவே மஹேன் ஆரம்பித்திருந்தார். அவரது கலைப்படைப்புக்களை மத ரீதியான சிருஷ்டிகளுக்குள் வரையறையிட்டு வகைப்படுத்த முடியாது.

“கணேசக் கடவுள் அண்ட சராசரங்களுக்கும் பொதுவானார், கணேசக் கடவுள் தெடார்பான கோட்பாடுகள் இந்து சமயத்தைப் போன்றே பௌத்த மதத்திலும் பின்பற்றப்பட்டு வருகின்றமை மறுக்கப்பட முடியாத உண்மையாகும். நான் இந்தக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளேன், எனினும், நான் ஏதாவது ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துவதனைவிட ஏதாவது ஒன்றை படைப்பதற்கு உந்தப்பட்டுள்ளேன். சிறு வயதிலிருந்தே ஓவியராக வர வேண்டும் எனக் கனவு கண்டேன்” என மஹேன் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

நூற்பத்து மூன்று வயது நிரம்பிய ;மஹேன் சண்முகம் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கிறிஸ்தவர். மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து அவரது மூதாதையர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளனர்.

தனது தந்தையுடன் சிறு வயதில் இந்து ஆலயங்களுக்கு சென்ற சந்தர்ப்பங்களில் ஆலயங்களில் வீற்றிருந்த வர்ணமயமான கணேச உருவங்கள் அவரது மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

மஹேனது முதலாவது படைப்பு பகுத்தறிவு உந்துதல் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை என்பவற்றினால் உருவானதென்று குறிப்பிட்டால் அது பிழையாகாது.

1994ம் ஆண்டு காலப்பகுதியில் மஹேன் சிங்கப்பூரில் தொழில் புரிந்து வந்த காலத்தில் கடவுள் கணேசனது குறியீட்டியல் மற்றும் விக்கிரகங்களின் தத்துவங்கள் தெடார்பாக கல்வி கற்கக் கூடிய ஓர் சந்தர்ப்பம் கிட்டியது.

வரலாற்று காலங்களில் கணேச சிற்ப மற்றும் ஓவியங்களில் காணப்பட்ட 32 இலக்கண மரபுகள் குறித்து மஹேன் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார். இந்த ஆய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கணேசக் கடவுளை சமகால ஓவிய நுட்பங்களில் வெளிக் கொணர்ந்தார்.

மரபுரீதியான ஓவிய பாணியில் நவீனத்தை புகுத்துவதற்கான தேடுதல் வேட்கை மஹேனிடம்; விரவிக் காணப்படுகின்றது.

கடவுள் கணேசனின் மரபு ரீதியான வடிவங்கள் என்ற எல்லைக்குள் தனது படைப்பாற்றலுக்கு கடிவாளம் இட்டுக் கொள்ளாது பரந்து விரிந்த ஓர் விற்பன்ன நுட்பத்தை ஓவியங்களில் மிளிரச் செய்துள்ளார் எனக் குறிப்பிட்டார் அது பிழையாகாது.

உணர்வுகளும், கருப்பொருட்களுமே பொதுவாக ஓவியங்களின் பிரதிபலிப்புக்களாக காணப்படும். எனினும், மஹேன் தனது ஓவியப் படைப்புக்களில் சமூக பிரச்சினைகள், முரண்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் பின்னிற்கவில்லை.

கடவுள் வழிபாடு மற்றம் மனித நேயம் பற்றிய மரபு ரீதியான கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அவரது ஓவிய சிருஷ்டிகள் காணப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக கணேசக்கடவுள் அகங்காரத்தை ஒழிக்கும் கடவுளாகும். சுயநலம் மற்றும் ஆணவம் என்ற இரண்டு பிரதான குணாதிசயங்களே இந்த அகிலம் முழுவதிலும் வௌ;வேறு வடிவங்களில் பரிணமித்து உள்ளதனை விளக்கும் தத்துவார்த்த கலை முயற்சி அவரது படைப்புக்களில் விரவிக் காணப்படுகின்றது.

2002ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலித் தீவில் இடம்பெற்ற கோரமான குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக மஹேன் தனது கிறிஸ்தவ பாடசாலை சீருடையை, பிள்ளையார் அணிந்திருப்பதனைப் போன்றும், கடவுளின் கைகளில் சமாதானத்தை வலியுறுத்தி “வீ” என்ற சமாதானத்திற்கான அடையாளத்தையும்; ஓர் அற்புத ஓவியப் படைப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

32 விநாயக உருவ இலக்கண வடிவங்களுக்கு அப்பால் புதிய பரிமாணங்களில் தனது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் சுதந்திரமாக சிருஷ்டிகளை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

முறையாக பாடசாலைக் கல்வியைத் தொடராத மஹேன் சிறு வயது முதலே ஓவிய ஆற்றலை வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 16 வயதில் ஓவியராக பணியாற்றத் தொடங்கிய மஹேன் விரைவில் கணனி வரைகலைத்துறையைத் தெரிவு செய்தார். மஹேன் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் தொழில் செய்வதற்காக இலங்கையிலிருந்து வெளியேறினார்.

ஓர் ஓவியக் கலைஞனாக திகழ வேண்டும் என்ற ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு தொடர்ச்சியாக என்னுள் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

தனது இளமைக் காலத்தில் பிரித்தானிய ஓவியர் கில்பர்ட் என்ட் ஜோர்ஜ் மற்றும் சுரெசலிசம், டாலி, எர்ன்ஸ்ட், மாக்ரைட் போன்றவை குறித்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

ஏனைய இலங்கை ஓவியர்களைப் போன்றே மஹேனது கலாசார் வேர்களும் கீழைத்தேய மற்றும் மேலைத்தையே மரபுகளைப் பற்றிப் பிடித்துள்ளது.

அவரது தனிப்பட்ட ஓவிய சிருஷ்டிகளின் வெளிப்பாடு ஓர் ஆசியரது அடையாளங்களை பறைசாற்றி நிற்கின்றது எனக் கூறின் அது பிழையாகாது.

கந்தாரா கால சிற்பக் கலைஞர்கள் நீண்ட தியானத்தின் மூலம் கற்கலுக்குள் மறைந்திருக்கும் சிற்ப வடிவங்களை கண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கந்தாரா காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட கோயில்களின் சிற்ப மற்றும் ஓவிய வடிவங்களின் பாதிப்புக்களை மஹேனின் ஓவியங்களில் தெளிவாக அவதானிக்க முடியும்.

விநாயகீ

விநாயகீ கணேசனின் பெண்பால் படைப்பாகும். இவர் 2007ம் ஆண்டு விநாயகீ தொடர்பான புதிய படைப்புக்களை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஸ்ரீ குமார நூலில் விநாயகீ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கணேசக் கடவுளின் பெண் உருவம் குறித்தான படைப்புக்கள் ஆர்வத்தை தூண்டக்கூடியதாக அமைந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநாயகீ என்ற பெண் தெய்வத்தின் கழுத்துக்கு மேல் பகுதி யானையின் உருவத்தை ஒத்ததாகவும், உடல் பகுதி இளம் பெண் ஒருவரின் உடலமைப்பையும் ஒத்திருப்பதாக விபரிக்கப்பட்டுள்ளது.

கணேசன் அல்லது விநாயகனின் சக்தி வடிவமாக விநாயகீ கருதப்படுகின்றார் அல்லது விநாயகக் கடவுளின் படைப்பாற்றலாக விநாயகீ கருதப்படுகின்றார்.கணேசனின் சக்தி வடிவத்தை இரண்டு நிலைகளாக ஜே.ஹெர்பர்ட(1930); விதந்துரைத்துள்ளார். முதலாவது புத்தி (பகுத்து அறிந்து கொள்ளக்கூடிய மனோ திடம்) மற்றையது சித்தி (அதீத சக்தி அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை) அல்லது ரித்தி (நேர்த்தி). விசித்திரமான மனித உடலமைப்பையும், வரலாற்று சூழ்நிலைகளையும் பிரதிபலிப்பதாக விநாயகீ கடவுளின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

உடலின் தலைப் பகுதி யானையின் சிரசுப் பகுதியை ஒத்ததாகவும், உடற் பகுதி பெண்ணைச் சுட்டுவதாகவும் விநாயகீ உருவங்கள் காணப்படுகின்றன.

ராஜஸ்தானின் ராய்ராவில் உள்ள டெரகொட்டாவில் முதன் முதலாக முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் பெண் கணேச கடவுள் அல்லது விநாயகீ காணப்பட்டமைக்கான சான்றுகள்; கிடைக்கப் பெற்றுள்ளன.

கணேச பெண் தெய்வ விக்கிரகங்கள் 64ம் யோகினி ஆலயங்களில் கண்டு பிடிக்கப்பட்டன. இவ்வாறான 18 யோகினி ஆலயங்கள் இந்தியா முழுவதும் பரவிக் காணப்படுவதாகவும், இலங்கையில் இவ்வகையினை உடைய ஓர் ஆலயம் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கணேசன் தனது ஒற்றைக் கொம்பை எவ்வாறு இழந்தார் என்பதற்கு பல்வேறு ஐதீகக் கதைகள் குறிப்பிடப்படுகின்றன. அனைத்து வகை இரட்டை விதிகளிலிருந்தும் வெல்லக் கூடிய வல்லமையை ஒற்றைத் தந்தம் குறிப்பதாக பக்த அடியார்கள் திடமாக நம்புகின்றனர்.

முன்னொரு காலத்தில் பரசுராம முனிவரும், மஹா விஷ்ணுவும் சிவபெருமானை பார்க்கச் சென்ற போது இடையில் விநாயகர் வழி மறித்ததாகவும் இதனால் ஆத்திரமுற்ற பரசுராம முனிவர் விநாயகரது ஓர் தந்தத்தை கோடரியினால் வெட்டி எறிந்ததாகவும் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடந்தோறும் பதர்பாத மாதத்தின் அமாவாசைக்கு அடுத்து வரும் நான்காம் நாள் கணேசக் கடவுளின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இது விநாயக சதுர்த்தி அல்லது விநாயக சாவித்தி என அழைக்கப்படும்.

பக்தர்கள் விநாயகப் பெருமானின் 21 நாமங்களை உச்சரித்து அரிசி மற்றும் வண்ண மலர்களை; படைக்கின்றனா.; விநாயக சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என நம்மவர் நம்புகின்றனர்.

ஓம் என்ற மந்திரத்தின் மூலம் கணேசன் அடையாளப்படுத்தப்படுகின்றார். ஓம்காரசவரூப என்ற கண்டறியப்படாத ஞானத்தை விளக்கி நிற்பதாய் குறிப்பிடப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் பின்னர் மஹேன் சண்முகம்; பிள்ளையாரைத் தனது பாடசாலைக்குரிய நிறங்களில் வர்ணந் தீட்டி “வீ” என்ற சமாதானத்திற்கான அடையாளத்தையும் சித்திரத்தினுள் புகுத்தியுள்ளார்.

16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முத்காலா புராணத்தில் எட்டு நிலைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது

1. வக்கரதுண்டா

தும்பிக்கை நாயகன்

மட்சராவை அழிக்கும் கடவுள்

பொறாமையை அழிக்கும் கடவுள்

2. ஏக தந்தா

ஒரு தந்தைக் கொண்ட கடவுள்

மதத்தை அழிக்கும் கடவுள்

குடிபோதைகளை இல்லாதொழிக்கும் கடவுள்

3. மஹோதரா

தொப்பை அப்பன்

மோகத்தை அழிப்பவர்

மாயை அழிப்பவர்

4. கஜ்னானனா

யானை முகக் கடவுள்

உலோபத்தை அழிப்பவர்

பேராசையை இல்லாதொழிக்கும் கடவுள்

5. லம்போதரா

தொப்பை அப்பன்

குரோதத்தை அழிப்பவர்

கோபத்தை அழிக்கும் கடவுள்

6. விகடா

அநித்திய செயல்

காமத்தை அழிப்பவர்

சிற்றின்பஆசை ஒழிக்கும் கடவுள்

7. விக்னராஜா

தடைகளின் கடவுள்

மமதையை அழிப்பவர்

ஆணவத்தை அழிக்கும் கடவுள்

8. தூம்ரவர்ணா

அகங்காரத்தை அழிப்பவர்

மோகத்தை அழிக்கும் கடவுள்

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை