அருள்மிகு மயூராபதி பத்திரகாளியம்மன் வருடாந்த பஞ்சரதோற்சவம்
~ கொழும்பு, வெள்ளவத்தை - அருள்மிகு மயூராபதி பத்திரகாளியம்மன் வருடாந்த பஞ்சரதோற்சவம் இன்று ஆகஸ்ட் 9ம் திகதி ~
மயூராபதி காளியம்மா
மாட்சிமை மிக்க தாயவளே!
மயூராபதி உறைந்து
மானிடரைக் காப்பவளே!

அரசும் வேம்பும் இணந்துமே
அகிலத்தின் தாயவளை தாலாட்டும்
வெலேந்தி விளயாடும் தாயவளே
வேட்கை கொண்டே வணங்குகின்றோம்
பஞ்சரதம் பவனி வர
பாவவினை பறந்தோடும்
அஞ்ஞான இருளகற்றி
மெய்ஞானம் அருள்பவளே
வீரபத்திரன் நாயகியே
விருப்புடனே அருள்சுரப்பாய்!
சூலாயுதம் தானேந்தி
சூழ்வினைகள் அழிப்பவளே!
புதுமையுள்ள தாயவளே
புவனமதைக் காப்பவளே!
எம் இனத்துயர் களைந்து
ஏகாந்த நிலையகற்றி
ஏற்றம் தந்திடம்மா
ஆபத்து நேரந்தன்னில்
அருகிருந்து காப்பவளே
சிற்றிடையில் சிவந்தபட்டு
திருக்கரத்தில் திரிசூலம்
மயூராபதி காளியம்மா
உன் திருமுகத்தைக் காணபதற்கு
என் முகத்தில் அமைந்திருக்கும்
இரு விழியால் இயன்றிடுமோ!
ஆனந்த வாழ்வு தந்து தாயவளே
மானிடரைக் காத்திடம்மா - 'மாவையூர் வி. சண்முகசுந்தரம்
நன்றி: வீரகேசரி இணையம்
படம்: 2006 ம் ஆண்டு ~ அருள்மிகு மயூராபதி பத்திரகாளியம்மன் வருடாந்த பஞ்சரதோற்சவம்

