Main | February 2008 »

January 27, 2008

அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியது ஏன்?

* கவனிக்க வேண்டிய பல அம்சங்கள்

டீ.பீ.எஸ்.ஜெயராஜ்

னாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா) இறுதியாக மேற்கொண்ட தீர்மானம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு சென்ற 14ஆம் திகதி நடந்த வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்போடு பெரிதும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது.

இதில் ஓரளவு உண்மையிருந்த போதி லும், ஸ்ரீ.ல.மு.கா.வின் முடிவை இத்தகைய கண்ணோட்டத்தோடு மட்டும் நோக்குவது தவறாகும். அவ்வாறு செயல்படுவதற்கு ஸ்ரீ.ல.மு. கா.வை தூண்டிய அரசியல் நிர்ப்பந்தங்கள் சிக்கலானவையும், பிரச்சினைக்குரியனவுமா கும்.

ராஜபக்ஷ அரசு, பேரினவாத மனப்போக் கைக் கைவிட்டு சிறுபான்மையினரின் விவகாரங்களில் நியாயமான கரிசனை காட்ட முன்வராது போனால், இவ்வாறான அழுத்தங்களும், அதிர்வுகளும் தவிர்க்கவொண்ணாதவையாகிவிடும்.

ஸ்ரீ.ல.மு.கா.வின் இத் தீர்மானத்திற்கு வழிகோலிய காரணிகளை உற்று நோக்குவதற்கு முன்னர், அரசாங்கத்தோடு இணைவதற்கு அக் கட்சியை உந்திய அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது சாலச் சிறந்ததாகும். கட்சியின் கடந்த கால வரலாற்றை ஆராய்வதும் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.

[ஸ்ரீ.ல.மு.கா. "தாருஸ்லாம்" செயலகத்தில் நடாத்திய பத்திரிகையளர் மாநாட்டில் ரவுப் ஹக்கீம்-டீசம்பர் 13, 2007 படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை][ஸ்ரீ.ல.மு.கா. "தாருஸ்லாம்" செயலகத்தில் நடாத்திய பத்திரிகையளர் மாநாட்டில் ரவுப் ஹக்கீம்-டீசம்பர் 13, 2007 படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை]

ஸ்ரீ.ல.மு.கா.இன் தோற்றம்:

ஸ்ரீ.ல.மு.கா. இன் தோற்றம் இந் நாட்டு அரசியல் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. கவர்ச்சியும், ஆகர் சக்தியும் வாய்க்கப்பெற்றிருந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தமக்கேயுரிய தீட்சண்யமான பார்வையாலும், அரசியல் ஞானத்தாலும் புவியியல் ரீதியாக சிதறிப்போயிருந்த இந் நாட்டு முஸ் லிம் சமூகத்தை ஓர் உயிரோட்டமுள்ள சக்தியாகப் பின்னிப் பிணைத்தார்.

இக் கட்சியின் அரசியல் அடித்தளம் பொதுவாகக் கிழக்கு மாகாணமும், குறிப்பாக அம்பாறை மாவட்டமுமாகும்.

மேலாதிக்க சிங்கள மேட்டுக் குடியினர் காலாதிகாலமாகப் பச்சைத் தரப்பில், அல் லது நீலத் தரப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கையாண்டு வந்தனர். அஷ்ரப் இத்தகையோருக்கு அப்பாற்பட்டவர்; அவர் சுதந்திரமாகச் செயற்பட்டவர்; அவ்வாறாயினும் அவர் தாம் கொண்ட கொள்கை, சுய கௌர வம் என்பவற்றின் அடிப்படையில் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருந்தவர்.

1994 ஆம் ஆண்டில் அஷ்ரப், ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் சந்திரிகா பண்டாரநாயக்காவோடு கூட்டுச் சேர்ந்தார். சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் பிரதான பங்காளியாக இருந்து அரசியல் பலத்தை ஸ்ரீ.ல.மு.கா. பரிசீலித்தது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு அநேக விடயங்களில் வாக்காளர்களைத் திருப்திப்படுத்துதற்கு ஸ்ரீ.ல. மு.கா.வினால் முடிந்தது.

அஷ்ரப் தாம் அதிகாரம் மிக்க தலைவரொருவராக இருந்தபடியால் உட்கட்சிப் பூசல் தலைதூக்க விடாது தடுத்து வந்தார். ஆயினும், அந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் யூ.எல்.எம்.(தொப்பி) மொஹிதீன், எம்.எம்.சுஹைர், எஸ்.எம்.அபூபக்கர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், டாக்டர் எம்.இல்யாஸ் ஆகிய ஐந்து எம்.பி.க்கள் அவரோடு முரண்பட்டனர்.

அஷ்ரப்பினுடைய சகாக்களுள் ரவூப் ஹக்கீம் ஆகக்கூடிய நம்பிக்கைக்கு உரியவராகவும், பலம் வாய்ந்தவராகவும் விளங்கினார். அவர் கட்சியின் விடிவெள்ளியாகப் பிரகாசித்தார். அஷ்ரப்பின் துக்ககரமான மறைவின் பின்னர், ஹக்கீம் அந்த இடத்தை நிரப்பினார். ஆனால், அவருக்கு எதிராக சில சக்திகள் செயல்பட்டன. அவர்களில் சிலர் பேரியல் அஷ்ரப்பை சூழ்ந்து கொண்டு குடும்ப அரசியலை நிலை நாட்ட விழைந்தனர்.

தனித்துவமான முஸ்லிம் காங்கிரஸில் வெடிப்புகள் விழ ஆரம்பித்த போதிலும், அந்த ஆதிக்கம் பொருந்திய அரசியல் இயக்கம் அதற்கு இடந்தரவில்லை. ஒரு பலம் வாய்ந்த கட்சியின் கீழ் முஸ்லிம்கள் ஐக்கியப்படுவதைப் பலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சந்திரிகா குமாரதுங்கவோடு அஷ்ரப் நெருக்கமான தொடர்பைப் பேணிவந்த போதிலும், ஹக்கீம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அஷ்ரப்பின் விதவை மனைவி பேரியலுக்கும், அவரது அரசியல் வாரிசு ஹக்கீமுக்கும் இடையிலிருந்த முரண்பாடும் துரதிர்ஷ்டவசமாக நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர், ஸ்ரீ.ல.மு.கா.விற்குள் ஆழமான பிளவு தென்பட்டது.

துண்டாடல்

அஷ்ரப், ஸ்ரீ.ல.மு.கா.வை முஸ்லிம்களுக் கான ஒரு கட்சியாக வளர்த்து வந்த போதும், கிழக்கின் பல்லினத் தன்மையைப் பொறுத்து அரசியல் ரீதியான பரந்தளவிலான கூட்டு ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியத்தை அவர் உணரத் தலைப்பட்டார். தம்மை இன நல்லிணக்கத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பக்கூடிய தேசியத் தலைவராக அஷ்ரப் இனம் காட்ட முற்பட்டார்.

அதன் பெறுபேறாக தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) தோற்றம் பெற்றது. தமது புதிய அரசியல் சித்தாந்தத்தை வடிவமைப்பதற்குள் துயர்மிக்க வான்வெளி விபத்து காரணமாக அவர் மரணித்தார்.

அஷ்ரப்பை இழந்த நிலையில் ஸ்ரீ.ல.மு.கா.துண்டாடப்பட ஆரம்பித்தது. அப்போதைய நிலையில் அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கிளம்பிய சவால்களை எதிர்நோக்குவதற்கு இளவல் ஹக்கீம் போதிய அனுபவம் இன்றிக்காணப்பட்டார். கட்சி, அஷ்ரப்பை ஏற்றுக்கொண்டது போன்றே தம்மையும் தலைவராக அங்கீகரிக்கும் எனக் கருதியது ஹக்கீம் விட்ட தவறுகளில் ஒன்றாகும்.

இதைவிட அஷ்ரப் கிழக்கு மாகாணத்தினதும், அம்பாறை மாவட்டத்தினதும் மண் ணின் மைந்தன். ஹக்கீம் கலகெதரயைச் சேர்ந்தவர். அவர் கிழக்கு முஸ்லிம் அல்லர்.

ஆகையால், தமது தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஹக்கீம் உள்ளுர் அரசியல்வாதிகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் கண்டி மாவட்டத்தில் அதிகார அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல்களில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். அதாவுல்லாஹ், அன்வர் இஸ்மாயில் ஆகியோர் அப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா.இன் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளாகப் பரிணமித்தனர். தனிநபர் சுயபிரபல்யத்துவமும் குண இயல்பு முரண்பாடுகளும் மேலும் பிளவுக்கு வழிவகுத்தன. அதிகாரத்திலிருந்தோரால் உந்தப்பட்டு அதாவுல்லாஹ் பிரிந்து சென்று தேசிய காங்கிரஸை ஆரம்பித்தார்.

ஸ்ரீ.ல.மு.கா. துண்டாடப்படும் படலம் தொடர்ந்தது. 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா., ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க) உடன் சேர்ந்து போட்டியிட்டது. ஸ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி. கூட்டு அத் தேர்தலில் வெற்றியீட்டியதால் ஸ்ரீ.ல.மு.கா., ஐ.தே.கட்சியுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

சிங்கள, பௌத்த மேலாதிக்க சித்தாந்தத்தோடு அத் தேர்தலில் போட்டியிட்ட ஜாதிக ஹெல உறுமய பல ஆசனங்களை வென்றெடுத்தது. அக் கட்சியின் அநேக கொள்கைகள் முஸ்லிம் எதிர்ப்புத் தன்மை வாய்ந்தவையாகும்.

மீண்டும் ஸ்ரீ.ல.மு.கா. பிளவு தூண்டப்பட்டது. அமைச்சுப் பதவிகள் வாரி வழங்கப்பட்டன. அதன் பெறுபேறாக எம்.பி.க்களான றிசாத் பதியுதீன், நஜீப் அப்துல் மஜீத், அமீர் அலி, ஹுசைன் பைலா ஆகியோர் அரசாங்கத்திற்குத் தாவினர்.

அவர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தனர். இது ஸ்ரீ.ல.மு.கா. ஐ பாராளுமன்றத்தில் ஆறு ஆசனங்களாகக் குறைத்தது. ஆயினும், ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் அமோக வெற்றிபெற்றார்.

இவ்வாறான விசித்திரங்கள் அரங்கேறிய வேளையில் முஸ்லிம்களின் அரசியலில் ஓர் உண்மை உறுதியாக வெளிப்பட்டது. ஸ்ரீ.ல.மு.கா. மூலம் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த எம்.பி.க்களில் சிலர் கட்சி விசுவாசம் இன்றி நம்பிக்கையீனமாக நடந்து கொண்ட போதிலும், ஸ்ரீ.ல.மு.கா. இன் சராசரி வாக்காளர் எவரும் அவ்வாறு நடக்கவில்லை. ஸ்ரீ.ல.மு.கா., கட்சிக்கு உரிய ஆசனங்களை தொடர்ந்தும் அதிக அளவில் வென்றெடுத்ததோடு, அது தனித்த, பெரிய முஸ்லிம் கட்சியாகவும் திகழ்ந்தது.

அது முஸ்லிம்களின் அதி நம்பிக்கைக்குரிய அரசியல் குரலாக ஒலித்ததோடு, முஸ்லிம்கள் அதனை தங்களது கட்சியென இனங்காட்டிக் கொண்டனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கில் 13 முஸ்லிம் பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களில் 11 மன்றங்களின் அதிகாரத்தை அது கைப்பற்றியது.

நிச்சயமற்ற தன்மை

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.கா, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது. சிறுபான்மையினர் எனக் குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரின் அதிக பட்ச ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்தது.

ராஜபக்ஷ, தம்மமை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட கூடுதலான சிங்கள வாக்குகளைப் பெற்றார். புலிகள் அரசியல் மடமையாகவும், நம்பிக்கைத் துரோகமாவும் ஒரு பகிஷ் கரிப்பை நடத்தினர். அதன் விளைவாக வட கிழக்கு தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்க முடியவில்லை. சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ஷ மயிரிழையில் வெற்றி பெற்றார்.

இவ்வாறிருக்க, பேரியல், அதாவுல்லாஹ், றிசாத் போன்றோர் அமைச்சு அதிகாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த போது, ஸ்ரீ.ல.மு.கா. ஐச் சேர்ந்த ஒரு சாரார், கட்சி அரசாங்கத்தோடு இணைய வேண்டுமென அழுத்தம் கொடுக்கலாயினர்.

எவ்வாறாயினும், ஹக்கீம், கொள்கை ரீதியாக அதனைச் செய்ய வேண்டுமென முயற்சித்தார். அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர், சில குறிப்பிட்ட நிபந்தனைகளோடு பேச்சுவார்த்தை நடாத்த ஆரம்பித்தார்.

இதேவேளையில், ராஜபக்ஷ அரசும், எதிர்க்கட்சி எம்.பிக்களை காவு கொள்ளும் காரியத்தை அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கித் தீவிரப்படுத்தியது. ஷ்ரீ.ல.மு.கா. எம்.பிக்கள் சிலருடன் ஹக்கீமின் முதுகுக்குப் பின்னால் பேச்சுகள் நடந்தன. ஒரு கௌரவமான புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் அளவிற்கு அந்த எம்.பி.க்களிடம் பொறுமையும், சுய கட்டுப்பாடும் இருக்கவில்லை.

ஸ்ரீ.ல.மு.கா.இல் எஞ்சியிருந்த ஆறு எம்.பி.க்களில் குறைந்த பட்சம் மூவர் ஹக்கீமை கைவிட்டு விட்டு அரசுக்குத் தாவி விடுவார்கள் என்பது விரைவிலேயே தெரியவந்தது. அவ்வாறான சூழ்நிலையில் போதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்யப்படாத நிலையில் அரசாங்கத்தோடு இணைவதென கட்சிப் பிரமுகர்கள் தீர்மானித்தனர்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்னொரு பிளவை ஸ்ரீ.ல.மு.கா. இனால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை தோன்றியது. ஆகையால் இணைவது என்று கட்சி கூட்டாகத் தீர்மானத்தை மேற்கொண்டது. கிளர்ச்சி செய்த எம்.பி.க்கள் முடிவு எடுத்தனர்; தலைவர்கள் பின்தொடர்ந்தனர்.

இது சுய விருப்பத்தின் பேரில் நடந்த ஒரு திருமணம் அல்ல, கணவன் - மனைவி ஆகியோரின் உள்ளங்களைத் தொடாத துப்பாக்கி முனைத் திருமணம். இந்த தாம்பத்தியம் நீடிக்குமா என்பது சந்தேகத்திற்கு இடமாகவேயிருந்தது.

கசப்பான விதியின் நியதி

எத்தகைய பிளவைத் தவிர்ப்பதற்காக ஸ்ரீ.ல.மு.கா., அரசாங்கத்திற்குள் பிரவேசித்ததோ, அதைவிட அரசாங்கத்தை விட்டு வெளியேறும் போதும் இன்னொரு பிளவைச் சந்திக்க நேர்ந்தமை எதிர்பார்த்ததை விட கசப்பான ஏமாற்றமாகும். ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், ஹசனலி, பைசல் காசிம் ஆகிய எம்.பி.க்கள் மட்டுமே தம் பதவிகளைத் துறந்து எதிர்க்கட்சிக்குச் சென்றனர்.

நிஜாமுதீன், கே.ஏ.பாயிஸ் ஆகியோர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. ஓர் ஆடம்பர ஹோட்டலில் நன்கு உபசரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் காணாமல் போனதாக செய்தி பரவியது.

ஸ்ரீ.ல.மு.கா. இன் பிளவைப் பார்க்கும் போது அண்மைய வரலாறு மீண்டும் மீட்டப்படுவதாகத் தோன்றுகின்றது. கட்சி மேலும் பிளவுபடும். ஆபத்தைக் கூடப் பொருட்படுத்தாது ஷ்ரீ.ல.மு.கா.ஏன் எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்றது என்பது இங்கு எழும் கேள்வியாகும். அரச சுகபோகங்களைத் துறந்து, வெறுமை படர்ந்த எதிர்த் தரப்புக்குச் செல்வதற்குக் கட்சியை நிர்ப்பந்தித்தது என்ன? கட்சியின் அடிமட்டத்திலிருந்து மூலை, முடுக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அழுத்தம் என்பதே இதற்கான இலகுவான விடையாகும்.

கிழக்கில் முஸ்லிம் சமூகம் பொதுவாகவும், குறிப்பாகவும் அநேக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது என் பதை மறுப்பதற்கு இல்லை. இயன்ற வரை அவற்றை நிவர்த்திப்பதற்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லிம் எம்.பி.க்கள் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அல்லது அதற்கு விரும்பாவிட் டால் அவர்கள் அதற்குத் தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் வருவார்கள். அப்படியானால் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும்.

ஸ்ரீ.ல.மு.கா.இன் அடித்தளம் கிழக்கு மாகாணமாகும். கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. ஆதிக்கசக்தியாக இருந்த போது புலிகளுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் முறுகல் இருந்து வந்தது. அதைவிட ஏனைய பிரச்சினைகள் பெரிதாகத் தோன்றவில்லை.

ஆனால், எல்.ரி.ரி.ஈ. இப்பொழுது கிழக் கில் முக்கியமான சக்தியாக இல்லை. அந்த முரண்பாடு அகன்றுவிட, முஸ்லிம்களைப் பொறுத்தவரை வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற ஆரம்பித்துவிட்டன.

II

ஆனால், எல்.ரி.ரி.ஈ. இப்பொழுது கிழக் கில் முக்கியமான சக்தியாக இல்லை. அந்த முரண்பாடு அகன்றுவிட, முஸ்லிம்களைப் பொறுத்தவரை வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற ஆரம்பித்துவிட்டன.

இலங்கையில் சிங்களவர் அல்லாத ஏனைய இனத்தவர்களின் சட்டபூர்வமான முறைப்பாடுகளில் பிரதானமானது பேரினவாத சிங்கள அரசு சிறுபான்மையினர் மீது செலுத்தும் மேலாதிக்கமாகும். இதுவே பெரிய பிரச்சினையாகும். சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இதைவிடக் குறைந்தவையே.

தீமையான திட்டங்கள்

எல்.ரி.ரி.ஈ.இனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கிழக்கின் வெற்றி நம்பிக்கையூட்டவதாக அமைந்தது. ஆனால், அத்தகைய நம்பிக்கை விரைவில் பொய் ஆகிவிட்டது.

ராஜபக்‌ஷ சகோதர்களாலும், இனவாத பாசிச காவி உடை தரித்தோராலும் நடாத்தப்படும் இந்த அரசாங்கம், கிழக்கு மாகாணத்திற்கான தீய உள் நோக்கம் கொண்ட திட்டத்தை வெளிக்காட்டியது. தமிழரினதும், முஸ்லிம்களினதும் முதுகின் மீது சவாரி செய்து கிழக்கை சிங்களமயப்படுத்துவதே அதுவாகும்.

கிழக்கின்பிரதானமான பிரச்சினை எதுவென அங்கு வசிக்கும் தமிழரிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ எவராவது வினவினால், அதற்கான பதில் பெரும்பாலும் காணிப் பிரச்சினை என்பதேயாகும்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் புலிகளால் தவறாகக் கையாளப்பட்டன. எவ்வாறாயினும், அந்தக் காணிகள் முஸ்லிம்களுக்கு மீளக் கொடுக்கப்படவில்லை. மாறாக, அக் காணிகளில் சிங்கள மக்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேற்றப்படுகின்றார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் கட்டைப்பறிச்சானிலிருந்து, இலங்கைத் துறைமுகத்துவாரம் வரை முஸ்லிம்கள் மீன்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜபல் மலையில் அகழ்வது தடை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் முஸ்லிம் விவசாயிகள் தமது காணிகளில் மீளக் குடியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களுக்கான குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின் றன.

மட்டக்களப்பில் குடும்பிமலை(தொப்பிகல) பிரதேசங்களையும், அத்துடன் செங்கலடி, மஹா ஓயா பாதையூடாக விஸ்தரித்து புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஒன்றை ஏற்படுத்த சதி செய்யப்படுகின்றது.

இங்குள்ள காணிகளில் அநேகமானவை உண்மையிலேயே தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் சொந்தமானவை. தமிழ், முஸ்லிம் பாற்பண்ணை விவசாயிகளுக்கும், கால் நடை உரிமையாளர்களுக்கும் சொந்தமான மேய்ச்சல் நிலங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், இப்பொழுது என்ன நடக்கின்றது என்றால், இவற்றின் உரிமையாளர்கள் இருக்கத்தக்கதாக வெளியார் (சிங்களவர்) அந் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர்.

காணிப்பிரச்சினையின் தாக்கத்தை அம்பாறை முஸ்லிம்கள் மிக அதிகமாக உணர்கின்றார்கள். முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராக் கொண்ட ஒரே மாவட்டம் அதுதான். ஆனால் ராஜபக் அரசாங்கத்தில் அங்கு முஸ்லிம்களின் பரம்பல் வரைபடம் வேகமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இதனைத் தொடர்ந்தும் செய்யுமாக இருந்தால், அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களை விட சிங்களவரின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.

எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தால் போல, மாவட்டக் கொடியின் குறியீடுகள் காணப்படுகின்றன. அந்தக் கொடியில் திருகோணமலை மாவட்டம் கழுகு, மட்டக்களப் மாவட்டம் மீன் ஆகிய சின்னங்களால் (இலச்சினை) சித்தரிக்கப்படும் போது முஸ்லிம் பெரும்பான்மை அம்பாறை மாவட்டம் சிங்களவரின் பூர்வீகத்தைக் குறிக்கும் சிங்கம் இலச்சினையால் சுட்டப்படுவது இப்பொழுது பெரும் சிக்கலையும், சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.

காணிப் பிரச்சினை

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஷ்ரீ.ல.மு.கா. வட்டாரம், மூன்று வெவ்வேறு இடங்களைச் சுட்டிக் காட்டகின்றது. இதில் முதலாவது பொத்துவில்லுக்கும், உல்லைக்கும் இடைப்பட்ட 500 ஏக்கர் பரப்பைக் கொண்ட கரங்கோவா பிரதேசமாகும். இரண்டாவது, சம்மாந்துறைப் பிரிவில் உள்ள 400 ஏக்கர் விஸ்தீரணமான பள்ளக்காடு பரதேசமாகும். மூன்றாவது அட்டாளைச்சேனைப் பிரிவில் உள்ள 175 ஏக்கர் வரையிலான வெள்ளைக்கால் - பொன்னாவெளிப் பிரதேசமாகும்.

இந்தக் காணிகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சரான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க மீது ஸ்ரீ.ல.மு.கா.வட்டாரம் குற்றஞ்சாட்டுகின்றது.

கரங்கோவாவில் தமது காணிகளைப் பண்படுத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் அங்கு அத்துமீறி நுழைந்தவர்கள் எனக் கூறி வெளியேற்றப்பட்டார்கள். சம்பக்க ரணவக்க அதனை வன பாதுகாப்பு பிரதேசம் என்கிறார்.

பள்ளக்காடு காணிகளுக்கும் இதே கதிதான். வெள்ளைக்கால் பொன்னாளி காணிகள் தீகவாப தொல்பொருள் ஆய்வுக்கு உட்பட்ட பிரதேசம் என்கிறார்கள்.

இவை பற்றி தீர்வு காணப்பட வேண்டுமென்று அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுத்தார்கள். ஆனால், உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை. அத்துடன் விவசாயக் கால்வாய்களை நிரப்பியதால் நிவர்த்திக்க முடியாத பாதிப்பு ஏற்பட்டது.

இவற்றில் சில காணிகள் கல் ஓயாத் திட்டத்திற்கு முன்பே முஸ்லிம்களால் செய்கை பண்ணப்பட்டவை. ஆனால், இப்பொழுது பௌத்த புதைபொருள் (தொல்பொருள்)ஆய்வு, வன சுற்றாடல் பாதுகாப்பு என்ற போர்வையில் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலவுடமை மறுக்கப்படுகின்றது.

இந்த நிலப்பிரச்சினை பாரதூரமானதாக மாறிவிட்டது. இதனை தீர்த்து வைக்குமாறு ஸ்ரீ.ல.மு.கா. மீது அதிகமான அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. மீண்டும், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதிகாரம் மிக்கவர்கள் எதனையும் சாதிக்கவில்லை. இது தொடர்பான சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தை வாபஸ் பெறுமாறு சம்பிக்க ரணவக்க மீது உரிய அழுத்தம் செலுத்தப்படவில்லை.

காணி கபளீகரம் தொடர்கின்றது..

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ராஜபக்‌ஷ அரசாங்கம் பெரும் சிக்கலை எதிர்நோக்கிய போது ஸ்ரீ.ல.மு.கா.வுக்கும், ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, பசில் ஆகியோருக்கும் இடையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ.ல.மு.கா.இந்தப் பிரச்சினைகளை கிளப்பியபோது, பசில் ராஜபக்‌ஷ அனுதாபம் காட்டியதோடு, வருத்தமும் தெரிவித்தார். ஸ்ரீ.ல.மு.கா.முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பசில் பேசியதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பணித்தார்.

சிறிது காலத்திற்கு எல்லாம் சரி போன்று இருந்து அம்பாறையில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓய்ந்திருந்தன் ஸ்ரீ.ல.மு.கா. நம்பிக்கையோடு இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால், பிறகு நிலைமை மாறியது. காணி கபளீகரம் மிண்டும் தலைதூக்கியது. சுற்றாடல் அமைச்சர் அதனைத் தடுக்கவில்லை.

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ம் திகதி நடக்கவிருந்த போது ஷ்ரீ.ல.மு.கா. அரசிலிருந்து விலகிக் கொள்ளும் நிலை ஏற்பட்ட போது மீண்டும் பேச்சுக்கள் நடந்தன.

ஸ்ரீ.ல.மு.கா. தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருந்தால் டிசம்பர் 14ம் திகதிக்குப் பிறகு தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், ஸ்ரீ.ல.மு.கா.தனது முடிவில் உறுதியாக இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகி வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.

இந்த முடிவு கட்சியின் மேலிடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டதல்ல, இந்த முடிவு கட்சித் தொண்டர்களினால் தூண்டப்பட்டது. கிழக்கு மாகாணக் காணிப் பிரச்சினையும், சமூகம் சார்ந்த ஏனைய பிரச்சினைகளும் கட்சி உறுப்பினர்களை கவலையும், ஆத்திரமும் அடை யச் செய்திருந்தன.

இத்தகைய கட்சித் தொண்டர்களை மறைந்த தலைவர் அஷ்ரப் போராளிகள் என விளித் தார். இப்பொழுது இந்தப் போராளிகள் கட்சிக்குள் அரசியல் போராட்டம் நடாத்துகின்றனர்.

விலகுவதற்குத் தீர்மானம்

ஸ்ரீ.ல.மு.கா. கட்சிக்குள் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கிழக்கு மாகாணப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தோடும், ஜும்இய்யதுல் உலமா அமைப்போடும் ஆலோசனைகள் நடந்தன. அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென உறுதியாக உணரப்பட்டது.

27 உறுப்பினர்களைக் கொண்ட அதியுயர் பீடம், 57 உறுப்பினர்களைக்கொண்ட அரசியல் பீடம், 214 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு என்பன தனித்தனியே கூடி அரசாங்கத்திலிருந்து விலகுவதென்று ஏகமனதாக முடிவெடுத்தன. அஃது ஒரு மும்முனைத் தீர்மானமாகும்.

ஸ்ரீ.ல.மு.கா. இன் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்ட குழுக்கள் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. நாடெங்கிலுமுள்ள கட்சி உறுப்பினர்கள் கொண்ட பீடங்களே ஒருமித்து இந்த முடிவுக்கு வந்தன. சமூகத்தின் பாதுகாப்பு இன்மையும் புறக்கணிப்புமே இதற்குக் காரணமாகும்.

முஸ்லிம்கள் எதிர்நோக்கிய ஒரு பிரச்சினை ஓசை (சப்தம்) காரணமாக சூழல் மாசடைதல் சட்டமாகும். பள்ளிவாசல்களில் தொழுகைக்காக பாங்கு சொல்லி அழைப் பது வழக்கமாகும். இந்த பாங்கு ஒலி பெரும்பாலும் மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை. அதனை செவியுறுவது நன்மையாகக் கருதப்படுகின்றது.

முஸ்லிம்கள் ஐவேளை தொழுகையில் ஈடுபடுவர். புதிய சட்டத்தின்படி இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணிவரை ஓசை எழுப்புவது தடை செய்யப்பட்டிருப்பதால் சுபஹ் தொழுகைக்கு பாங்கு ஓசை எழுப்பமுடியாது. அத்துடன், ஏனைய நான்கு தொழுகைகளுக்கும் எழுப்பப்டும் பாங்கோசை பள்ளிவாசல் கட்டிடத்திற்கு அப்பால் பரவக்கூடாது. என தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ஓசை காரணமாக கூழல் மாசடையும் சட்டம் சம்பிக்க ரணவக்கவின் சுற்றாடல் அமைச்சினாலேயே இயற்றப்பட்டது.

இறைச்சி வியாபார கட்டுப்பாடு

முஸ்லிம்களைப் பாதிக்கும் மற்றொரு பிரச்சினை மிருகங்களையும், கோழிபோன்ற பறவைகளையும் உணவுக்காக அறுப்பதாகும். மிருகவதை எனக் கூறி இதனைத் தடுப்பதற்கான சட்டவிதிகளை ஹெல உறுமய அமைச்சர் அறிமுகப்படுத்தினார். மிருகங்களை அறுப்பதும், இறைச்சியை இடத்திற்கு இடம் கொண்டு செல்வதும் கடுமையான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது.

இறைச்சிக் கடைக்காரர்களின் அதிகமானோர் முஸ்லிம்கள் என்பதும், அந்தச் சமூகத்தினரே அதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அதிகமாக இறைச்சி உட்கொள்வோரும் முஸ்லிம்களேயாவர். ஆகையால் இந்த சட்டவிதிகளால் அச் சமூகத்தினரே மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.

ஹஜ் பெருநாளின் நிமித்தம் ஆடு, மாடுகளை அறுத்து குர்பான் கொடுக்கும் சமயக் கிரியையையும் புதிய சட்டங்கள் பாதித்தன.

முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் மேற்சொன்ன மூன்று வியங்களோடும் ஜாதிக ஹெல உறுமய தொடர்புபட்டிருந்தது. தாம் தெரிவு செய்யப்படடால் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைப்புவிடுப்பதை (பாங்கு) தடுப்பதாக ஜே.எச்.யு (ஜாதிக ஹெல உறுமய) தேர்தல் பிரசாரத்தின் போது கூறிவந்தது. அத்துடன் அக் கட்சியின் தத்துவாசிரியரும், பாராளுமன்ற உறுப்பனருமான சங்கைக்குரிய எல்லாவெல மேதானந்த தேரர் முஸ்லிம்களின் மீதான தமது கட்சியின் வெறுப்பை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அரசியல்வாதியான அந்தப் பிக்கு, கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் வரலாறு பூர்வமான வசிப்பிடம் என்பதை மறுத்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இன ரீதியான பீதி மனப்பான்மை

இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாறு இருக்கும் போது, இன ரீதியான பீதி மனப்பான்மையினால் உந்தப்பட்டு, இந்த மஞ்சள் உடை தரித்த சிங்கள மேலாண்மை மிக்கவர் முஸ்லிம்களை அவர்களது தாயகம் சவூதி அரேபியா எனக் குறிப்பட்டு அவர்கள் மீண்டும் அங்கு சென்றுவிட வேண்டும் என்கிறார்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்கான காரணங்களை பாராளுமன்றத்திலும், பின்னர் ஊடக மாநாட்டிலும் ஹக்கீம் தெளிவுபடுத்தினார். அரசாங்கம் சிறுபான்மை இனத்தவருடன் சிநேகபூர்வமாக நடந்து கொள்ளவில்லை என்பதை அவர் விளக்கிக் கூறினார்.

ஹக்கீமின் கூற்று எத்துணை பெறுமதி வாய்ந்தது என்பதில் எவருக்காவது சந்தேகமிருக்குமானால், அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு சங்கைக்குரிய மேதானந்த தேரர் கக்கிய இனவாத விம் ஒன்றே போதும். பிக்குவின் கூற்றை ஸ்ரீ.ல.மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி பாராளுமன்றததில் காரசாரமாக மறுத்துரைத்தார்.

III

தாம் தெரிவு செய்யப்பட்டால் பள்ளி வாசல்களில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதை (பாங்கு) தடுப்பதாக ஜே.எச்.யு (ஜாதிக ஹெல உறுமய) தேர்தல் பிரசாரத்தின் போது கூறிவந்தது. அத்துடன் அக் கட்சியின் தத்துவாசிரியரும், பாராளுமன்ற உறுப்பினருமான சங்கைக்குரிய எல்லாவெல மேதானந்த தேரர் முஸ்லிம்களின் மீதான தமது கட்சியின் வெறுப்பை வெளிப்பiயாகவே தெரிவித்தார்.

ஆரசியல்வாதியான அந்தப் பிக்கு, கிழக்குமாகாணம் முஸ்லிம்களின் வரலாறு பூர்வமான வசிப்பிடம் எனபதை மறுத்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இன ரீதியான பீதி மனப்பான்மை

இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாறு இருக்கும் போது, இன ரீதியான பீதி மனப்பான்மையினால் உந்தப்பட்டு, இந்த மஞ்சள் உடை தரித்த சிங்கள மேலாண்மை மிக்கவர் முஸ்லிம்களை அவர்களது தாயகம் சவூதி அரேபியா எனக் குறிப்பிட்டு அவர்கள் மீண்டும் அங்கு சென்றுவிட வேண்டும் என்கிறார்.

ஆரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்கான காரணங்களை பாராளுமன்றத்திலும், பின்னர் ஊடக மாநாட்டிலும் ஹக்கீம் தெளிவுபடுத்தினார் அரசாங்கம் சிறு பான்மை இனத்தவருடன் சிநேகபூர்வமாக நடந்து கொள்ளவில்லை என்பதை அவர் விளக்கிக் கூறினார்.

ஹக்கீமின் கூற்று எத்தனை பெறுமதி வாய்ந்தது என்பதில் எவருக்காவது சந்தேகமிருக்குமானால், அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு சங்கைக்குரிய மேதானந்த தேரர்க்கிய இனவாத வி~ம் ஒன்றே போதும். பிக்குவின் கூற்றை ஸ்ரீ.ல.மு.கா. செயலாளார் நாயகம் ஹசனலி பாராளுமன்றத்தில் காரசாரமாக மறுத்துரைத்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக முஸ்லிம் சமகம் எதிர்நோக்கும் வேறு விடயங்களும் உள்ளன.முஸ்லிம் பாடசாலைகளில் 2500 ஆசிரியர் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமலிருக்கின்றன.மௌலவி (அரபு ஆவிரியர் )பதவிகளும் காலியாக இருக்கின்றன.பல்கலைக்கழகங்களுககு குறைவான முஸ்லிம் மாணவர்களே அனுமதிக்கப்படுது இன்னொரு பிரச்சினையாகும்.

ஆரச ஆதரவு கருணா குழுவினரின் தமிழிழ மக்கள் விடுதலை புலிகளின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையிட்டும் ஸ்ரீ.ல.மு.கா.அதிக கரிசனை காட்டி வருகின்றது. அரசாங்கம் முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிந்சியளித்து, அவர்களை ஆயுதமேந்தனள வைப்பது மற்றொரு பாரதுரமான பிரச்சனையாகும். இந்த குழுக்கள வௌ;வேறு பெயர்களில் அக்கலைப்பற்று காத்தான்குடி,ஒட்டமாவடி,முதூர் பிரதேசற்களில் காணப்படுகின்றன.

குறுகிய காலத்தில் இக்குழுக்கள் கருணாகுழுவினரோடு இணைந்து தமிழ்- முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கப் பயன்படுத்தப்படும்.காலப்போக்கில் இவை,ஸ்ரீ.ல.மு.கா.போன்ற சட்டபுர்வமான சாத்வீகக்கட்சிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வன்முறையைக் கையாளக்கூடும்.

ஆதிகாரம் இல்லை

அரசாங்கத்தில் இருந்த போதும் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரம் அற்றதாகவே இருந்தது.பதவிகளை வகித்ததைத்தவிர,சமூகத்திற்கு தற்களால் உருப்படியாக எதையுசெய்ய முடியதிருந்தாக கிழக்கு மாகாண பாராளுன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மொத்தம் 23 முஸ்லிம் எம்.பி.க்கள்ல் 18பேர் அரசாங்கத்தி;ல் அமைச்சர்களாகவும்,பிரதியமைச்சர்களாகவும் பதவிகள் வகித்த போதிலும் அவர்களில் எவருமே சமூகத்திற்காக பெரிதாக் எதையும் செய்ய முடியாதிருந்தனர். இந் நிலைமை நுஆ, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றிற்கும் பொருந்தினாலும் கூட ஸ்ரீ.ல.மு.கா இற்கே அது சாலப் பொருந்தும் என்றார் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர். எமது மக்கள் ஸ்ரீ.ல.மு.கா ஐந்தான தங்களது கட்சியாக மதிக்கின்றனர். அவர்களது தேவைகளை எங்களால் தான் நிறைவேற்றமுடியும் என அவர்கள் நம்புகிண்றனர் என்றார் அவர்.

கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினாலேயே ஸ்ரீ.ல.மு.கா பெரிதும் உந்தப்பட்டது. இந்தச் சம்மேளனம் ஜனாதிபதிக்கு ஒரு மகஜரை அனுப்பியது. அது கிடைக்கப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதேதவிர, மேற்கொண்டு எதுவுமே நடக்கவில்லை.

டீசம்பர் 14ஆம் திகதி வரவு- செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது ஒருமித்து கூட்டான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்தச் சம்மேளனத்தின் தலைவர் அய்க்ஹனிபா (மதனி) எல்லா முஸ்லிம் எம்.பி.க்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு ஸ்ரீ.ல.மு.கா மட்டும்தான் சாதகமாக நடந்து கொண்டது. ஆரசாங்கத்திலிருந்து விலகுவது என்ற தீர்மனத்தை அது எடுத்தது.

ஸ்ரீ.ல.மு.கா இன் இந்த வெளியேற்றம் அக் கட்சியின் செல்வாக்கதை அதிகரித்திருப்பதாக சில பிரதான ஊடகங்களில் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களில் சிலர் இப்பத்திக்குத் தெரிவித்தனர். இந்த அரசின் முஸ்லிம் விரோதப் போக்கும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முஸ்லிம் எம்.பி.க்களுக்கு இருந்த சிக்கல்களும் மொத்தத்தில் சமூகத்தைப் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தது.

ஸ்ரீ.ல.மு.கா அதன் அரசியல் பாரிச வாதத்திலிருந்து மீண்டு, மறுபடியும் இலங்கை முஸ்லிம்களின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சக்தியாகப் பரிணமித்திருப்பதனால் சமூகம் இப்பொழுது அதனைச் சுற்றி அணி திரள்கின்றது.

விரும்பியாக வேண்டிய மாற்று வழிகள

இது, ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு விரும்பியாக வேண்டிய மாற்று வழிகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று,அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து,முஸ்லிம்களின் பிரச்சினைகளிலி சலவற்றையாவது தீர்ப்பதன் மூலம் ஸ்ரீ.ல.மு.கா.சிறடறை எதிராக அதிக விழுக்காடு (புள்ளி)களைப் பெறல். ஆனால்,ஆட்சியில் ஒன்றித்துப்போயுள்ள செல்வாக்கு மிக்க முஸ்லிம் விரோத இனவாத சக்திகள் காரணமாக இது பெரும்பாலும் சாத்தியமில்லை.

மற்றது.அரசாங்கத்திலிருந்து விலகி,முட்டி மோதும் தன்மையுள்ள அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுதல்.

அடுத்தத,ஸ்ரீ.ல.மு.கா. உடன் ஒன்றிணைதல் பள்ளிவாசல்கள் சம்மேளனம்,ஜம்இய்யதுல் உலமா,முஸ்லிம் கவுன்சில் என்பன ஒரு நடைமுறைச்சாத்தியமான பங்களிபபைச் செய்ய முன்வருமானால் அந்த இலக்கை அடைவதில் சிரமம் இராது.

ஹக்கீமின் தலைமைத்துவுத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் வெளிப்பாடாகவே ஸ்ரீ.ல.மு.கா.இன் தi;லவர்,கடந்த கால அனுபவங்களின் ஊடாக பெற்றுள்ள முதிர்ச்சியின் கரணமாக,சிங்கள,தமிழ் சக்திகளுடன் இணையாகப் போட்டியிட்டுகட்சியின் சமநிலையைச் சரிவரப் பேண முயற்சித்துள்ளார்.

தம்மீது தொடுக்கப்பட்ட மோசமான தனிப்பட்ட தாக்குதல்களும்,ஸ்ரீ.ல.மு.கா.தலைவரை மனவலிமை குன்றச் செய்தது. சிலவேளைகளில் அவரது செயல்பாடுகள் பலவீனமானவையாகவும் காணப்பட்டன.

ஆனால்,அண்மைக் காலங்களில் பல்வேறு அம்சங்களில் ஹக்கீம் துணிச்சலான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.பொதுக்கணக்குக் குழுவில் தவிசாளர் என்ற முறையில்,பாரளமன்றத்தில் உறுதியாக நின்றார்.கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்து,புத்தளத்தில் பலசாலி எனக் கருதப்பட்ட அப்துல் பாயிஸை கட்சியிலிருந்து இடைநிறுத்த அவர் துணிச்சலுடன் முன்வந்தார். கொழும்பில் நடைபெற்ற கிழக்கின் வெற்றி கொண்டாட்டத்தை அவர் கண்டித்தார். அத்துடன் அவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார் இப்பொழுது அரசாங்கத்தை விட்டு வெளியேறியதன் மூலம் தமக்கு அநீதியிழைக்கப்படக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகிறார்.

மீள்குடியேற்றப் பிரச்சினை

ஜனாதிபதியை எதிர்த்தும் ஹக்கீம் புத்தளத்தில் வசிக்கும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுத்தார். அமைச்சரவையில் ரிசாத் பதியுதீன், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பான பத்திரமொன்றைச் சமர்ப்பித்த போது இந்தச்சம்பவம் இடம்பெற்றது.

ஜனாதிபதி தனது நிதானத்தை இழந்தார். அந்த அமைச்சரவைப் பத்திரத்தை வீசி எறிந்து ரிசாத் பதியுதீனை கடிந்து கொண்டார். வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்தில் மிக நீண்டகாலமாக தங்கியிருப்பதாகவும் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் வடக்கில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ரிசாத் பதியுதீன் அமைதியாக இருந்த போது, ஹக்கீம் ஜனாதிபதியோடு முரண்பட்டார்;. பின்விளைவு பற்றிச் சிந்திக்காது அவசரப்பட்டு அவ்வாறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்றார் அவர். அப்பொழுது ஜனாதிபதி, வாகரையில் இடம்பெயர்ந்தோர் அவசரமாக மீள்குடியேற்றப்பட்டதைச் சுட்டிக் காட்டியபோது, ஹக்கீம் வாகரையின் நிலைமை வேறுபட்டது என்றும், இரண்டையும் தொடர்பு படுத்தி நோக்கக்கூடாது என்று பொறுமையாக வாதிட்டார்.

ஹக்கீம் அடிபணியாததைக் கண்ட அவரது அமைச்சரவைச் சகாக்கள் பலர் ஆச்சரியப்பட்டனர். பின்னர், பேரியல்  ஹக்கீமிடம் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும்; என்றார்.

எம்.எச்.எம். அஷ்ரப், தமது தூரதிருஷ்டியாலும், துணிச்சலான தலைமைத்துவத்தாலும் ஸ்ரீ.ல.மு.கா. ஐ அஷ்ரப் தம்வசப்படுத்தியிருந்தார். ஹக்கீம் அதற்கு ஒப்பிடக் கூடிய நிலையை எட்ட வேண்டியிருந்தது. தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவதைப் பார்த்தால் அதற் கான காலம் கனிந்திருக்கிறது. அஷ்ரப் பின் பாத்திரத்தை வகிக்க ஹக்கீமுக்கு உரிமையிருக்கிறது.

இதே வேளை, ஸ்ரீ.ல.மு.கா. இன் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வற்புறுத்தல்களை சரிவர விளங்கி, அவற்றை உள்வாங்க ஜனாதிபதி முன்வர வேண்டும். முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது. இலங்கை முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியின் கரிசனையைக் கருத்திலெடுத்து அவற்றை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதிக்கு இதுவே உகந்த தருணமாகும். [djeyaraj@federalidea.com]

 நன்றி: த நேசன் (ஆங்கில வார இதழ்)