April 24, 2011

1961 சத்தியாக்கிரக இயக்கத்தின் 50 ஆண்டு நிறைவு

(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

"....இப்படியாக அடக்குமுறையாளரின் வன்முறை, அடக்கப்பட்டவர்களின் அஹிம்சையை ஒடுக்கியது. சிங்கள பெருமிதவாதத்தின் ஆயுத வலு தமிழர்களின் வன்முறையில்லாத போராட்டத்தை நசுக்கியது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, தமிழ் தேசிய போராட்டத்துக்கு மிகவும் அவசியமான அரசியல் அநுபவத்தின் தொடக்கமாக அமைந்தது.

இந்த அநுபவம் தமிழர்களுக்கு ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. தமது அகிம்சை வழியான போராட்டத்தின் ஆன்மீக பலம், வன்முறை அடக்குமுறையாளரின் இராணுவ பலத்தின் முன் தாக்குபிடிக்காது என அவர்கள் அறிந்து கொண்டனர். இந்த அடக்குமுறையாளர்கள் மனிதத்தின் தார்மிக நியமங்கள், நாகரிகப்பண்பு என்பவற்றை கடந்தவர்களாக காணப்பட்டனர்.

தொடர்ந்து வாசிக்க:"1961 சத்தியாக்கிரக இயக்கத்தின் 50 ஆண்டு நிறைவு" »

சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான கடும் நடவடிக்கையின் தாற்பரியம்

(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

ஜனவரி 11 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் மீது சுவிஸ் சமஷ்டி பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்ததும், அதன்போது 10 உயர்மட்ட புலி செயற்பாட்டாளர்களை பொலிஸார் தமது காவலுக்குள் கொண்டு வந்ததும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

ஹெல்வீச்சியா அல்லது சுவிட்ஸர்லாந்து, இலங்கையில் பிறந்த 40000 - 42000 தமிழர்களின் வதிவிடமாக உள்ளது. கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தோரைவிட இந்த எண்ணிக்கை குறைவானது ஆகும்.

பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட எந்தவொரு மேற்கத்தைய நாட்டைவிடவும், சுவிட்ஸர்லாந்து தமிழர்கள் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்பு விகிதாசார ரீதியில் அதிகமானதாகும்.

தொடர்ந்து வாசிக்க:"சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான கடும் நடவடிக்கையின் தாற்பரியம்" »

February 13, 2011

தேசிய கீதம்: நமோ நமோ தொடக்கம் ஸ்ரீலங்கா மாதா வரை

டி.பி.எஸ்.ஜெயராஜ்

லங்கையின் தேசிய கீதம் பற்றி தற்போது கிளப்பப்பட்டுள்ள பிரச்சினை இந்த சமயத்தில் தேவையில்லாத விரும்பத்தகாத ஒன்றாகும். பிரிவினைக்கு எதிரான நீண்ட ஆனால் வெற்றிகரமான யுத்தத்துக்குப் பின் நாட்டை எதிர்நேக்கியுள்ள உடனடி பிரச்சினை, யுத்தத்தின் வடுக்களை ஆற்றுவதும் ஐக்கியப்பட்ட நாட்டை பலப்படுத்துவதுமாகும்.

தொடர்ந்து வாசிக்க:"தேசிய கீதம்: நமோ நமோ தொடக்கம் ஸ்ரீலங்கா மாதா வரை" »

January 14, 2011

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு தினம் ~ ஜனவரி 15

அன்பு
பட்டை போடப் போடத்தான்
பள பளக்கும் வைரமே

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினு மினுக்கும் தங்கமே

அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே

அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989)

[மார்ட்டின் லூதர் கிங் நினைவு கண்காட்சி ~ படக் கோவை]

December 18, 2010

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

யூ.கே. ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஹாடிங், பென் மஸின்ரயர் ஆகியோர் 2010 டிசெம்பர் 01 ஆம் திகதி, லண்டனில் உள்ள டோசெஸ்ட்ரா ஹோட்டலைவிட்டுச் செல்ல ஆயத்தமானபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் கீழ் மண்டபத்துக்கு அவசரமாக வந்து அவர்களுடன் பேசினார்.

'ஜனாதிபதி ராஜபக்ஷ உங்களை அவசரமாக பார்க்க விரும்புகிறார். தயவுசெய்து உங்களால் வரமுடியுமா?' என ஜனாதிபதியின் தூதுவர் கேட்டார்.

தொடர்ந்து வாசிக்க:"ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்" »

எல்.ரீ.ரீ.ஈ. புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்

டி.பி.எஸ். ஜெயராஜ்

விநாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர்.

சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நவம்பர் 24 ஆம் திகதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து வாசிக்க:"எல்.ரீ.ரீ.ஈ. புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்" »

எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா?

டி.பி.எஸ். ஜெயராஜ்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கிலிமைந்த கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தொடராக நடந்த யுத்தத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 இல் திட்டவட்டமாக நிர்மூலமாக்கப்பட்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சிரேஷ்ட பிரதித்தலைவர்கள், தளபதிகள், ஆகியோருடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இத்தோடு பெருமளவிலான பொதுமக்களும் பலியாகினர்.

தொடர்ந்து வாசிக்க:"எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா?" »

December 04, 2010

mp3: திருவேட்கை: அமரர் போல வாழ்வேன், - என்மேல் அன்பு கொள்வையாயின்

காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:

BharathyO124.jpg

தொடர்ந்து வாசிக்க:"mp3: திருவேட்கை: அமரர் போல வாழ்வேன், - என்மேல் அன்பு கொள்வையாயின்" »

November 25, 2010

காணொலி: 'வேலவா..வடி வேலவா' - கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர்

வேலவா..வடி வேலவா...வேடனாக வந்து நின்ற வேலவா - வழங்குபவர்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள்


கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர் நிகழ்வில் இருந்து படக் கோவை ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

தொடர்ந்து வாசிக்க:"காணொலி: 'வேலவா..வடி வேலவா' - கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர்" »

November 21, 2010

காணொலி: திருகோணமலை நிலாவெளியில் மீனவர் மரபு இசைப்பாடல்

ஸ்ரீ லங்கா மேல் மாகாணத்தில் இருந்து , கிழக்கு மாகாணம் வந்துள்ள மீனவர்கள் கடற்கரையில் இசைக்கும் மரபு இசை

தொடர்ந்து வாசிக்க:"காணொலி: திருகோணமலை நிலாவெளியில் மீனவர் மரபு இசைப்பாடல்" »

Thiratti.com Tamil Blog Aggregator