திரை இசை: 'உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம்'
படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
பாடல். : வைரமுத்து
தொடர்ந்து வாசிக்க:"திரை இசை: 'உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம்'" »
படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
பாடல். : வைரமுத்து
தொடர்ந்து வாசிக்க:"திரை இசை: 'உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம்'" »
[ புதினப்பலகை ] சிறிலங்கா புலனாய்வுத் துறை கசியவிட்ட சொந்த-தயாரிப்பு கொலைப் பட்டியல்: சர்ச்சையும் மறுப்பும்
சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் தயாரிக்கப்பட்டு கசிய விடப்பட்டிருக்கும் கொலைப் பட்டியல் ஒன்று, தமிழ் மற்றும் சிங்கள சமூக சேவையாளர்களையும், ஊடகத் துறையினரையும் உள்ளடக்கியதாக 35 பேரின் பெயர்களைக் கொண்டிருக்கின்றது.
அந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆட்களும் - சிறிலங்கா புலனாய்வுத் துறையால் அவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைவாகப் புள்ளிகள் கொடுக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க:"சிறிலங்கா புலனாய்வுத் துறை கசியவிட்ட சொந்த-தயாரிப்பு கொலைப் பட்டியல்" »
[ புதினப்பலகை ] சிறிலங்காவின் வடக்கு பகுதிக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை பலப்படுத்தும் பொருட்டு 'யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில்' என தலைப்பிடப்பட்டிருக்கும் அனைத்துலக யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சி 2010 ஏப்ரல் 18 முதல் 20 வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
இந்த வர்த்தக கண்காட்சியின் [Jaffna International Trade Fair 2010 - JITF] அமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்திற்கான தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பல பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க:"'யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில்' வர்த்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்" »
[ புதினப்பலகை ] பிரபாகரனின் வீட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: பாதுகாப்பு வழங்குகிறது இராணுவம்
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பினை உருவாக்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அமைதிக் காலத்தின் போது அடையமுடியாத ஒன்றை மறைவின் பின்னர் அடைந்திருக்கிறார் என இந்திய ஊடகவியலாளர் எழுதியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றின் செய்தியாளர் வல்வெட்டித்துறையில் இருந்து அந்த ஊடகத்தில் எழுதியுள்ளாதாவது,
நாட்டினது பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் குறித்ததொரு பகுதியினர் மத்தியில் பிரபாகரனின் புகழ் மேலோங்கிக் காணப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க:"பிரபாகரனின் வீட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு" »
தேர்தல் விஞ்ஞாபனம் - 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2010 ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம், இன்று மார்ச் 12ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. அதன் முழு வடிவம் பின்வருமாறு:
தொடர்ந்து வாசிக்க:"2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்" »
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இன்டர் நியூசில் ஒலிபரப்பான
~ மார்ச் 8ஆம் திகதிய “மீண்டும் வாழ்வோம்” நிகழ்ச்சி ~
தொகுப்பு: வாசுகி சிவகுமார்
ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் தினம் வந்து போகின்றது. அவ்வாறு மார்ச் 8ஆம் திகதி மற்றுமொரு பெண்கள் தினம் கொண்டாடப்படவிருக்கின்றது. சம உரிமையும் சம வாய்ப்பும், அனைவருக்கும் என்பதாக இம்முறை சர்வதேச மகளிர் தினத்தொனிப் பொருள் அமைந்திருக்கிறது.
[ புதினப்பலகை ] தமிழ் மக்கள் உட்பட சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியா சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
[ புதினப்பலகை ] சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்தில் முன்னொரு போதும் இல்லாத வகையில் 15 அரசியல்கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 27 அணிகள் போட்டியில் குதித்துள்ளன.
ஒன்பது ஆசனங்களுக்காக இந்த அணிகளின் சார்பில் மொத்தம் 324 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.
தொடர்ந்து வாசிக்க:"கொதிப்பு அடைகின்றது யாழ்ப்பாண தேர்தல் களம்: 27 அணிகள் களத்தில்" »
[ புதினப்பலகை ]
போர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்: எல்லைகளற்ற மருத்துவர் குழு
இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிடையிலான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல நோயாளர்களுக்கு தொற்று, குறிப்பாக எலும்பில் தொற்று ஏற்பட்டிருக்கின்றன. எறிகணைச் சிதறல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் ஏற்பட்ட காயங்கள் பல இன்னமும் மாறவில்லை.
யுத்த காலத்தில் காயங்களில் அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள்:
தொடர்ந்து வாசிக்க:"போர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்" »
